Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜோதிர்மயியின் கும்மாங்கோ... சமீப காலமாக கேரளத்தில் இருந்து வந்த நடிகைகள் யாரும் செய்யாத வேலையை ஜோதிர்மயி செய்துள்ளார்.கவர்ச்சி விஷயத்தில் ரொம்ப ரொம்ப கட்டுப்பாட்டுடன் இருப்பேன் என்று கூறிய ஜோதிர்மயி அதற்கு அப்படியே உல்டாவாககிளாமரில் கலக்கி எடுத்து வருகிறார்.கேரள வரவுகளில் வயதில் மூத்தவர் இவர் தான் என்பதாலோ என்னவோ, தான் நீண்ட நாட்கள் கோலிவுட்டில் தாக்குப் பிடிக்கமுடியாது என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டார் போலத் தெரிகிறது.இதனால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்றெல்லாம் எந்தவிதமாக கட்டுப்பாடும் போடாமல் எடுத்த எடுப்பிலேயே ஒருபாட்டுக்கு அமுக்கு ஆட்டம் போடத் தயாராக இருக்கிறார். மலையாளத்தில் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக இவர் நடித்த பரத் சந்திரன் ஐபிஎஸ் படம் இப்போது தமிழில் சிவலிங்கம் ஐபிஎஸ்என்ற பெயரில் சத்யராஜை ஹீரோவாகப் போட்டு உருவாகி வருகிறது.இதில் நடிக்கத் தான் முதலில் ஜோதிர்மயி புக் செய்யப்பட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக ஜோதிர்மயிக்கு ஸ்வீடன் நாட்டில்உருவாகும் ஒரு ஆங்கில பாப் ஆல்பத்தில் நடிக்க சான்ஸ் வந்துவிட்டதாம்.ரெய்ச்சல் க்ரீன் என்ற பாடகியுடன் இந்தியாவைச் சேர்ந்த கவர்ச்சிப் பெண்ணாக ஜோதிர்மயி ஆடுகிறாராம். அந்த ஆல்பத்துக்காகஆபர் செய்யப்பட்ட சம்பளம் மிகப் பெரியதாக அப்படியே ஸ்விசுக்குக் கிளம்பிப் போய்விட்டார் ஜோதிர்மயி. இதனால்சிவலிங்கம் ஐபிஎஸ் படத்துக்கு இப்போது வேறு ஒரு ஹீரோயினைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.ஸ்விஸ் போவதற்கு முன்னதாக சரண் இயக்கத்தில் காம்னா ஹீரோயினாக நடிக்கும் இதயத் திருடன் படத்தில் ஒரு குத்தாட்டம்போட வாய்ப்பு வந்தது. சில லட்சங்களை லபக் என வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஜோதிர்மயி அந்தப் படத்துக்காக கவர்ச்சியை ஒரு கட்டுகட்டிவிட்டு போயிருக்கிறார்.கொய்யாங்கோ என்று அழகிய தமிழில் (?!?!) தொடங்கும் இந்தப் பாடலுக்கு உடைகளை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்குறைத்துக் கொண்டு கும்மாங்கோ பண்ணிவிட்டாராம் ஜோதிர்மயி.இந் நிலையில் குஷ்பு தனது கணவர் சுந்தரை ஹீரோவாக்குவதற்காக தயாரிக்கப் போகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்ககோலிவுட்டில் ஒரு ஹீரோயினும் முன் வரவில்லையாம். ஆனால், ஜோதிர்மயி மட்டும் ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.ஆனாலும், ஜோதிர்மயிக்கு ரொம்ப தைரியம்...
கவர்ச்சி விஷயத்தில் ரொம்ப ரொம்ப கட்டுப்பாட்டுடன் இருப்பேன் என்று கூறிய ஜோதிர்மயி அதற்கு அப்படியே உல்டாவாககிளாமரில் கலக்கி எடுத்து வருகிறார்.
கேரள வரவுகளில் வயதில் மூத்தவர் இவர் தான் என்பதாலோ என்னவோ, தான் நீண்ட நாட்கள் கோலிவுட்டில் தாக்குப் பிடிக்கமுடியாது என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டார் போலத் தெரிகிறது.
இதனால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்றெல்லாம் எந்தவிதமாக கட்டுப்பாடும் போடாமல் எடுத்த எடுப்பிலேயே ஒருபாட்டுக்கு அமுக்கு ஆட்டம் போடத் தயாராக இருக்கிறார்.
இதில் நடிக்கத் தான் முதலில் ஜோதிர்மயி புக் செய்யப்பட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக ஜோதிர்மயிக்கு ஸ்வீடன் நாட்டில்உருவாகும் ஒரு ஆங்கில பாப் ஆல்பத்தில் நடிக்க சான்ஸ் வந்துவிட்டதாம்.
ரெய்ச்சல் க்ரீன் என்ற பாடகியுடன் இந்தியாவைச் சேர்ந்த கவர்ச்சிப் பெண்ணாக ஜோதிர்மயி ஆடுகிறாராம். அந்த ஆல்பத்துக்காகஆபர் செய்யப்பட்ட சம்பளம் மிகப் பெரியதாக அப்படியே ஸ்விசுக்குக் கிளம்பிப் போய்விட்டார் ஜோதிர்மயி. இதனால்சிவலிங்கம் ஐபிஎஸ் படத்துக்கு இப்போது வேறு ஒரு ஹீரோயினைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்விஸ் போவதற்கு முன்னதாக சரண் இயக்கத்தில் காம்னா ஹீரோயினாக நடிக்கும் இதயத் திருடன் படத்தில் ஒரு குத்தாட்டம்போட வாய்ப்பு வந்தது.
கொய்யாங்கோ என்று அழகிய தமிழில் (?!?!) தொடங்கும் இந்தப் பாடலுக்கு உடைகளை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்குறைத்துக் கொண்டு கும்மாங்கோ பண்ணிவிட்டாராம் ஜோதிர்மயி.
இந் நிலையில் குஷ்பு தனது கணவர் சுந்தரை ஹீரோவாக்குவதற்காக தயாரிக்கப் போகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்ககோலிவுட்டில் ஒரு ஹீரோயினும் முன் வரவில்லையாம். ஆனால், ஜோதிர்மயி மட்டும் ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.
ஆனாலும், ஜோதிர்மயிக்கு ரொம்ப தைரியம்...