Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் வெள்ளித் திரையில் ஜோதிகா?
சூர்யா மனைவியான பின் தானுண்டு தன் குழந்தைகள் உண்டு என இருந்த நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறாராம்.
அதுவும் ஹீரோயினாகவே!
இவரை இயக்கவிருப்பவர் 'பசங்க' பாண்டிராஜ்.
நம்ப கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். காரணம், சூர்யா - ஜோதிகா திருமணம் முடிந்த பிறகு நடந்த பிரஸ் மீட்டில், 'திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?" என்று கேட்டபோது, "இல்லய்யா... அவ நடிக்கமாட்டா... அதை நாங்கள் ஒருபோதும் விரும்பவும் இல்லை", என்று மிகக் கோபமாக பதிலளித்தார் சிவகுமார்.
ஆனால் காலம் எல்லா முடிவுகளையும் மாற்றுமல்லவா... இப்போது சிவகுமார் குடும்பத்தின் பூரண ஆசியோடு நடிக்க வருகிறார் ஜோதிகா.
இந்தப் படத்தின் ஹீரோ கிடையாது (அதானே முக்கியம்!). சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு மிக முக்கியமான வேடமாம்.
மனைவி மீண்டும் நடிப்பதில் சூர்யாவுக்கும் முழு சம்மதமாம்!