Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காற்றின் மொழிக்கு பிறகு… கமர்ஷியலில் இறங்கும் ஜோதிகா
சென்னை: நடிகை ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயரிக்கிறார்.
36 வயதினிலே திரைப்படம் மூலமாக சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் ஒருபக்கம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, ராதாமோகனின் காற்றின் மொழி திரைப்படமும் தயாராக உள்ளது. இந்த நிலையில் அடுத்த பட ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார் ஜோதிகா.
எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தை எஸ்.ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் திருடன் போலீஸ் மற்றும் பாக்மதி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
கதையை தயார் செய்துவிட்டு இயக்குனர் எஸ்.ராஜ், ஜோதிகாவிடம் கூறியதாகவும், ராஜ் கதை சொன்ன விதத்தையும் கதையையும் வெகுவாக பாராட்டிய ஜோதிகா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். முழு ஸ்கிரிப்டும் தயாராகிவிட்டதால் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சமுதாய அக்கரைக் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் தயாராக உள்ளது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.