TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
காற்றின் மொழிக்கு பிறகு… கமர்ஷியலில் இறங்கும் ஜோதிகா
சென்னை: நடிகை ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயரிக்கிறார்.
36 வயதினிலே திரைப்படம் மூலமாக சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் ஒருபக்கம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, ராதாமோகனின் காற்றின் மொழி திரைப்படமும் தயாராக உள்ளது. இந்த நிலையில் அடுத்த பட ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார் ஜோதிகா.
எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தை எஸ்.ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் திருடன் போலீஸ் மற்றும் பாக்மதி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
கதையை தயார் செய்துவிட்டு இயக்குனர் எஸ்.ராஜ், ஜோதிகாவிடம் கூறியதாகவும், ராஜ் கதை சொன்ன விதத்தையும் கதையையும் வெகுவாக பாராட்டிய ஜோதிகா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். முழு ஸ்கிரிப்டும் தயாராகிவிட்டதால் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சமுதாய அக்கரைக் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் தயாராக உள்ளது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.