Don't Miss!
- News தாமரைக்கு ஓட்டுபோட கூறிய மூதாட்டி.. விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காற்றின் மொழிக்கு பிறகு… கமர்ஷியலில் இறங்கும் ஜோதிகா
சென்னை: நடிகை ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயரிக்கிறார்.
36 வயதினிலே திரைப்படம் மூலமாக சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் ஒருபக்கம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, ராதாமோகனின் காற்றின் மொழி திரைப்படமும் தயாராக உள்ளது. இந்த நிலையில் அடுத்த பட ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார் ஜோதிகா.
எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தை எஸ்.ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் திருடன் போலீஸ் மற்றும் பாக்மதி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
கதையை தயார் செய்துவிட்டு இயக்குனர் எஸ்.ராஜ், ஜோதிகாவிடம் கூறியதாகவும், ராஜ் கதை சொன்ன விதத்தையும் கதையையும் வெகுவாக பாராட்டிய ஜோதிகா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். முழு ஸ்கிரிப்டும் தயாராகிவிட்டதால் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சமுதாய அக்கரைக் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் தயாராக உள்ளது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.