லண்டனில் கணவருடன் பிறந்த நாள் கொண்டாடிய கபாலி நாயகி!
கபாலி படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடிக்கும் ராதிகா ஆப்தே இந்த ஆண்டு தன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
ராதிகா ஆப்தே நடிக்க வந்து எட்டாண்டுகள் ஆகின்றன. 2005-ல் வாஹ் லைப் ஹோ தே ஹைசி படத்தில் அறிமுகமான ராதிகா, 2012-ல் தோனி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

இந்த ஆண்டு மட்டும் தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.
ஆனால் ரஜினிக்கு நாயகியாக நடிப்போம் என்று அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
கபாலியில் நடிப்பதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் நாயகியாக மாறியுள்ளார்.
நேற்று அவர் தன் 30 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தன் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு.. மகிழ்ச்சியான பிறந்த நாள் இதுவே என ராதிகா தெரிவித்துள்ளார்.
நேற்று லண்டனில் தன் கணவர் பெனடிக்டுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார் ராதிகா ஆப்தே.


Click it and Unblock the Notifications











