Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது
திருவனந்தபுரம்: சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்து மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த நடிகை சந்தியாவின் திருமணம் ஒருவழியாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் நடிகை சந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் சந்தியாவுக்கும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கெடுத்தது. சந்தியா சென்னையில் உள்ள வீட்டில் சிக்கிக் கொண்டார். வெள்ளத்தால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை.
சந்தியாவின் குடும்பத்தாரால் மாப்பிள்ளை வீட்டாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தான் அவர்களின் செல்போன் வேலை செய்து மாப்பிள்ளை வீ்ட்டாரை தொடர்பு கொண்டு திருமணத்தை கேரளாவில் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதயடுத்து கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சந்தியா, வெங்கட் திருமணம் நேற்று நடைபெற்றது. சென்னையில் நிலைமை சரியான பிறகு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.