Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பட வாய்ப்பு இல்லை… பியூட்டி பார்லர் தொழிலுக்கு திரும்பிய சந்தியா
காதல் பட ஹிட் சந்தியாவிற்கு அடுத்தடுத்த படவாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தது. டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, மகேஷ் சரண்யா மற்றும் பலர், தூண்டில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தவிர மலையாளம்,கன்னடம், தெலுங்கு,படங்களிலும் நடித்துள்ளார்.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கு பிறகு தமிழில் சந்தியாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. மலையாளப் படங்களில் மட்டும் சிறு வேடங்கள் வரவே சென்னையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று குடியேறினார் சந்தியா.
இந்த நிலையில் அவத் தனது வருமானத்துக்காக கேரளாவின் முக்கிய நகரங்களில் அழகு நிலையங்களை தொடங்கியுள்ளாராம். நடிகர்-நடிகைகளுக்கு என பிரத்தியேகமான அழகு நிலையங்களை திறந்துள்ள சந்தியா அதை பராமரிக்க தனது தாயாரையே நியமித்துள்ளார். சந்தியாவின் தாயார் ஏற்கனவே பியூட்டி பார்லர் தொழில் நடத்தி வந்தவர் என்பதால் அவரால் எளிதாக இந்த தொழிலை நடத்த முடிகிறது. நல்ல வருமானமும் கிடைக்கிறதாம்.
இயற்கை மூலிகைகளைக் கொண்ட அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் சந்தியாவின் பியூட்டி பார்லருக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது என்கின்றனர். எப்படியோ பட வாய்ப்பு குறைந்தாலும் சொந்த தொழில் கைவிடவில்லை சந்தியாவிற்கு என்கின்றனர் கோலிவுட் பட உலகினர்.