Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரெண்டு பேருடன் தொடர்பு இருந்தது... ஆனா இப்ப விலகிட்டேன்! - காஜலின் காதல் ரகசியங்கள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வாலின் காதல் அனுபவங்கள் குறித்து கேட்டபோது, முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், "மும்பையில் நட்பாக இருப்பதென்பது சாதாரண விஷயம். என்னுடன் நட்பாக இருப்பவர்களை பிடிக்கும். அதே நேரம் என்னிடத்தில் நிறைய உரிமை எடுத்துக் கொண்டு பழகுவது பிடிக்காது. என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நட்பு ரீதியிலேயே பழகுகிறேன். அவர்கள் மும்பை வந்தால் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுவேன்.
அந்த எல்லையை தாண்ட மாட்டேன். ஆண் நண்பர்களால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதற்காக அழுது இருக்கிறேன்.
எனக்கு இரண்டு பேரிடம் தீவிரமான நெருக்கம் இருந்தது. அதில் ஒருவரிடம் நடிகையாவதற்கு முன்பு பழகினேன். இந்த தொடர்புக்காக நிறைய நேரம் ஒதுக்கவேண்டி இருந்தது. இதனால் அதை முறித்துக்கொண்டு விலகி விட்டேன். நடிகையான பிறகு இன்னொருவரின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்," என்றார்.