ஒண்ணு தான சொன்னாங்க.. இரண்டு மெழுகு சிலை இருக்கு… எது ஒரிஜினல் எது சிலைன்னே தெரியலையே காஜல்!
Recommended Video
சென்னை: மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

மெழுகு சிலை அருகே நடிகை காஜல் அகர்வால் நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எது ரியல், எது மெழுகு சிலை என்று தெரியாத படி தத்ரூபமாக இருக்கிறது.
தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே முதன் முறையாக நடிகை காஜல் அகர்வாலுக்குத் தான் இந்த பெருமை கிடைத்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை செய்ய மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து நிபுணர்கள் காஜல் அகர்வாலின் அங்க அளவுகளை எடுத்துச் சென்றனர்.
பிப்ரவரி 5ம் தேதியான இன்று சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிளிட்டர் உடையில் காஜல் அகர்வால் மின்னுவது போன்ற அழகான மெழுகு சிலையை வடிவமைத்துள்ளனர்.
அதன் அருகே பிங்க் நிற உடையில் காஜல் அகர்வால் நின்று கொண்டு மெழுகு சிலை போலவே போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











