Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சொந்தக் குரலில் பேச ரொம்ப நாளா ஆசைப்படும் காஜல்!
சென்னை: நடிகை காஜல் அகர்வால் விரைவில் தனது படத்திற்கு தானே டப்பிங் பேச இருப்பதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தமிழில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தனுஷ், கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுல் ஒருவராக உள்ளார். தமிழில் அடுத்ததாக இவர், விக்ரம் ஜோடியாக கருடா படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், தனது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம். விரைவில் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க இருக்கிறாராம்.
இவருக்கு ஓரளவுக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், இன்னும் சரளமாக பேச வரவில்லை. தமிழை விட தெலுங்கை சுலபமாகக் கற்றுக் கொண்டதாகக் கூறும் காஜல், எப்படியும் கூடிய சீக்கிரம் சரளமாக தமிழ் பேசக் கற்று தனது படங்களுக்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.