ஹீரோயின்
"ஏழுமலை" படத்தின் கதாநாயகியான நடிகை கஜாலா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுதற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் புதிய தகவல்கள் வந்துள்ளன.
அவரை ஒரு நடிகர் விரட்டி விரட்டி டார்ச்சர் கொடுத்ததாகவும் அதனால் தான் அவர் தற்கொலைக்குமுயன்றதாகவும் தெரிகிறது. முதலில் அவருக்கும் தெலுங்கு நடிகர் உதய்கிரணுக்கும் இடையிலான காதல்தோல்வியடைந்ததால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.
ஆனால், விசாரணையில் அவரை இன்னொரு நடிகர் விரட்டியதாகவும் அந்த டார்ச்சர் தாங்க முடியாமல் தான்தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.
மும்பையில் மாடலாக இருந்த கஜாலாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அர்ஜூன் தான். இவரது "ஏழுமலை"படத்தில் தான் கஜாலா அறிமுகமானார்.
ஹைதராபாத்தில் கஜாலா மயங்கி விழுந்தபோது ஸ்பாட்டில் அர்ஜூன் உடனிருந்தார். அவர் தான் கஜாலாவைமருத்துவமனையில் சேர்த்தார்.


Click it and Unblock the Notifications











