Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலியல் தொல்லை குறித்து பேசினால் என்ன நடக்கும் தெரியும்ல?: தனுஷ் வில்லி
மும்பை: சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து வெளியே சொன்னால் என்னவாகும் என்பது குறித்து பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து துணிச்சலாக பேசுவது போன்று பாலிவுட் பிரபலங்கள் செய்வது இல்லை என்ற பேச்சு உள்ளது.
இந்நிலையில் இது குறித்து நடிகை கஜோல் பேட்டி அளித்துள்ளார். பேட்டின்யின்போது அவர் கூறியதாவது,
அனைத்து துறைகள்
ஹாலிவுட்டை போன்று பாலியல் தொல்லை குறித்து பேசும் #MeToo இயக்கம் பாலிவுட் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் வர வேண்டும். இது ஒரு துறையின் பிரச்சனை அல்ல. இருப்பினும் பாலிவுட் மட்டும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறிய பிறகு அந்த நபருக்கு என்ன நடக்கும்?
வெட்கம்
பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை என்கிறார் கஜோல். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் தங்களின் கெரியர் நாசமாகிவிடுமோ என்ற பயத்தில் தான் பலரும் வாய் திறப்பது இல்லை என்று சில நடிகைகளே தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள்
குழந்தைகளை பொறுத்தவரை நான் மிகவும் கண்டிப்பான அம்மா. என் கணவர் அஜய் தேவ்கன் தான் அவர்களுக்கு செல்லம் கொடுப்பார். பெற்றோர்கள் சில சமயங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரும் புரிந்து கொண்டுள்ளார். நான் ஒரு ஹிட்லர் அம்மா. நான் ஒரு நல்ல நடிகை என்று என் பிள்ளைகள் வாயால் கேட்கும்போது அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை என்கிறார் கஜோல்.
நடிகை
என் மகள் என் வழியில் நடிகையாவாரா என்று கேட்கிறார்கள். அவர் நடிகையாக வேண்டும் என்று தெரிவித்தால் அவரை ஊக்குவிப்பேன். அவருக்கு என்ன பிடிக்குமோ அதை அவர் செய்ய வேண்டும். எனக்காக அவர் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வு செய்யக் கூடாது. நானும், அஜய்யும் பிரபலங்கள் என்றாலும் எங்கள் குழந்தைகள் பிற குழந்தைகளை போன்று சாதாரணமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று கஜோல் தெரிவித்துள்ளார்.