Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாலியல் தொல்லை குறித்து பேசினால் என்ன நடக்கும் தெரியும்ல?: தனுஷ் வில்லி
மும்பை: சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து வெளியே சொன்னால் என்னவாகும் என்பது குறித்து பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து துணிச்சலாக பேசுவது போன்று பாலிவுட் பிரபலங்கள் செய்வது இல்லை என்ற பேச்சு உள்ளது.
இந்நிலையில் இது குறித்து நடிகை கஜோல் பேட்டி அளித்துள்ளார். பேட்டின்யின்போது அவர் கூறியதாவது,
அனைத்து துறைகள்
ஹாலிவுட்டை போன்று பாலியல் தொல்லை குறித்து பேசும் #MeToo இயக்கம் பாலிவுட் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் வர வேண்டும். இது ஒரு துறையின் பிரச்சனை அல்ல. இருப்பினும் பாலிவுட் மட்டும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறிய பிறகு அந்த நபருக்கு என்ன நடக்கும்?
வெட்கம்
பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை என்கிறார் கஜோல். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் தங்களின் கெரியர் நாசமாகிவிடுமோ என்ற பயத்தில் தான் பலரும் வாய் திறப்பது இல்லை என்று சில நடிகைகளே தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள்
குழந்தைகளை பொறுத்தவரை நான் மிகவும் கண்டிப்பான அம்மா. என் கணவர் அஜய் தேவ்கன் தான் அவர்களுக்கு செல்லம் கொடுப்பார். பெற்றோர்கள் சில சமயங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரும் புரிந்து கொண்டுள்ளார். நான் ஒரு ஹிட்லர் அம்மா. நான் ஒரு நல்ல நடிகை என்று என் பிள்ளைகள் வாயால் கேட்கும்போது அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை என்கிறார் கஜோல்.
நடிகை
என் மகள் என் வழியில் நடிகையாவாரா என்று கேட்கிறார்கள். அவர் நடிகையாக வேண்டும் என்று தெரிவித்தால் அவரை ஊக்குவிப்பேன். அவருக்கு என்ன பிடிக்குமோ அதை அவர் செய்ய வேண்டும். எனக்காக அவர் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வு செய்யக் கூடாது. நானும், அஜய்யும் பிரபலங்கள் என்றாலும் எங்கள் குழந்தைகள் பிற குழந்தைகளை போன்று சாதாரணமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று கஜோல் தெரிவித்துள்ளார்.