ஷுட்டிங்கிற்கு மட்டம் போட்டுவிட்டு 2.0 பார்க்க இயக்குனர் விடவில்லை: வாரிசு நடிகை
Recommended Video

ஹைதராபாத்: 2.0 படம் பார்க்க இயக்குனர் அனுமதி அளிக்கவில்லை என்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. முதல் நாளே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டும் அல்ல, திரையுலக பிரபலங்களும் விரும்புகிறார்கள்.

ரஜினி படமாச்சே. அதுவும் 3டி தொழில்நுட்பம், 4டி சவுண்டு என்று புது அனுபவத்தை கொடுக்கும் படத்தை ரிலீஸான அன்றே பார்க்க ஆசை வராதா என்ன?
இந்நிலையில் இது குறித்து நடிகை லிசி, இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகளான நடிகை கல்யாணி ட்வீட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
2.0 படம் பார்க்க டைரக்டர்காரு அனுமதிக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கல்யாணி தற்போது கிஷோர் திருமலா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் ஜோடியாக சித்ராலாஹரி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











