காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க கரீனா கபூரை அணுகிய இயக்குனர்?
மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க இயக்குனர் ருபேஷ் பால் முதலில் கரீனா கபூர் கானை தான் அணுகினாராம்.
ஷெர்லின் சோப்ராவை வைத்து ருபேஷ் பால் இயக்கியுள்ள படம் காமசூத்ரா 3டி. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் ஷெர்லின் ஆடையின்றி வருகிறார்.
படப்பிடிப்பில் அவர் ஆடையின்றி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர் ருபேஷ் பால் காமசூத்ரா படத்தில் நடிக்க முதலில் கரீனா கபூர் கானை தான் அணுகினாராம். கரீனாவுக்கு கதை பிடித்திருந்தாலும் படத்தில் நிர்வாண காட்சிகள் அதிகம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதையடுத்து தான் ஷெர்லின் சோப்ரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். காமசூத்ரா படத்திற்கு ஏற்கனவே கண்டனங்கள் கிளம்பிய நிலையில் 66வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அதற்கு பாராட்டும் கிடைத்துள்ளது.
இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











