போதை பொருள் வழக்கு.. என் வாழ்க்கையே நாசமாபோச்சு.. சஞ்சனா கல்ராணி வேதனை!
சென்னை: பெங்களூருவை சேர்ந்தவர் சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வரும் இவர், நடிகை நிக்கி கல்ராணி இவரது சகோதரி ஆவார். இவர் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த இவரின், தலைமுடி மாதிரி ஆய்வு செய்யப்பட்டன.
இதையடுத்து, சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் வாங்கியதாகவோ விநியோகித்ததாகவோ அல்லது உட்கொண்டதாகவோ எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று நீதிமன்றம் இவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. இதுகுறித்து, எமது பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள சஞ்சனா கல்ராணி, போதை பொருள் வழக்கால் என் தனிப்பட்ட வாழ்க்கை, என் வாழ்க்கை மொத்தமும் நாசமாகிவிட்டது என்று பேசி உள்ளார்.



Click it and Unblock the Notifications











