Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வெள்ளித்திரையிலிருந்து 'சின்னத்திரை'க்கு தாவும் கார்த்திகா நாயர்?
மும்பை: நடிகை கார்த்திகா நாயர் விரைவில் இந்தி சீரியல்களில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் 'கோ' படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திகாவுக்கு அப்படம் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலுமே அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.
கார்த்திகா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'அன்னக்கொடி', 'புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை' ஆகிய படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை.
தற்போது அருண் விஜய்யுடன் இவர் நடித்த 'வா டீல்' படம் மட்டுமே கைவசம் உள்ளது. வேறு புதிய படங்கள் எதிலும் கார்த்திகா ஒப்பந்தமாகவில்லை.
நடித்த படங்கள் தொடர்ந்து சொதப்புவதால் தென்னிந்திய மொழிகளில் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கைவசம் வேறு படங்களும் இல்லாததால், தற்போது இந்தி சீரியல்களில் கார்த்திகா நடிக்கப் போவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி', 'பஜ்ரங்கி பைஜான்' போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தான் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதப்போவதாகக் கூறுகின்றனர்.
கார்த்திகாவின் அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா இருவரும் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தனர். ஆனால் கார்த்திகா மற்றும் அவரது தங்கை துளசி இருவராலும் அந்தளவுக்கு புகழ் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.