Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வெள்ளித்திரையிலிருந்து 'சின்னத்திரை'க்கு தாவும் கார்த்திகா நாயர்?
மும்பை: நடிகை கார்த்திகா நாயர் விரைவில் இந்தி சீரியல்களில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் 'கோ' படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திகாவுக்கு அப்படம் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலுமே அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.
கார்த்திகா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'அன்னக்கொடி', 'புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை' ஆகிய படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை.
தற்போது அருண் விஜய்யுடன் இவர் நடித்த 'வா டீல்' படம் மட்டுமே கைவசம் உள்ளது. வேறு புதிய படங்கள் எதிலும் கார்த்திகா ஒப்பந்தமாகவில்லை.
நடித்த படங்கள் தொடர்ந்து சொதப்புவதால் தென்னிந்திய மொழிகளில் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கைவசம் வேறு படங்களும் இல்லாததால், தற்போது இந்தி சீரியல்களில் கார்த்திகா நடிக்கப் போவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி', 'பஜ்ரங்கி பைஜான்' போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தான் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதப்போவதாகக் கூறுகின்றனர்.
கார்த்திகாவின் அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா இருவரும் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தனர். ஆனால் கார்த்திகா மற்றும் அவரது தங்கை துளசி இருவராலும் அந்தளவுக்கு புகழ் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.