Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தங்கை படிப்புக்காக பிரேக் விட்ட ‘கருவாப்பையா’ நடிகை.. மீண்டும் நடிக்க வருகிறார்!
நடிகை கார்த்திகா மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த, நடிகை கருவாப்பையா கார்த்திகா மீண்டும் நடிக்க வருகிறார்.
தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து " கருவாப்பையா கருவாப்பையா "என்ற பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை கார்த்திகா. தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பின்னர் தனது தங்கையின் படிப்பிற்கு உதவியாக இருப்பதற்காக சிறிது காலம் மும்பையில் தங்கியிருந்தார் கார்த்திகா.
விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜியாம்: சேரன் சொல்வது சரியா?
சென்னை திரும்பினார்:
இந்நிலையில், தங்கையின் படிப்பு முடிந்து சில தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார் அவர். பின்னர் வடபழனியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள், "நீங்க கருவாப்பையா கார்த்திகா தானே" எனக் கேட்டு அவரை சூழ்ந்துகொண்டனர்.
மீண்டும் நடிப்பு:
தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தபோதும், திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.
நடிக்க தயார்:
இதனால் மீண்டும் கார்த்திகாவை திரைப்படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் பேசி வருகிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.
ரீஎன்ட்ரி:
சமீபகாலமாக பல முன்னாள் நடிகைகள் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் விரைவில் கார்த்திகாவும் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் நடிக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.