கணக்கு பார்க்கும் கஸ்தூரி கஸ்தூரியை ஞாபகம் இருக்கிறதோ? த்ரிஷாவோட சீனியர், முன்னாள் மிஸ் சென்னை, முன்னணி நடிகர்களுடன் கொஞ்ச காலம் ஓட்டியவர். இடையில் கவர்ச்சிக்குத் தாவி சரிப்படாததால் படிப்பதற்காக அமெரிக்கா போய் விட்டார். இப்போது மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி வந்துள்ளார், ஆனால் நடிப்பதற்கு அல்ல. மிஸ் சென்னை பட்டம் வாங்கிய கஸ்தூரி, எல்லா அழகிகளும் செய்வது போலவே சினிமாவுக்கு வந்தார். பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அந்தக் கால முன்னணி நடிகர்களுடன் திறமை காட்டினார். கமல்ஹாசனின் மகளாக இந்தியனில் வந்து போனார். கோலிவுட்டில் நல்ல ஒரு ரவுண்டு வந்த கஸ்தூரி, பின்னர் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவே மலையாளம், கன்னடம் ஒரு வட்டமடித்தார். மலையாளத்தில் பலான பட ரேஞ்சுக்கு வாய்ப்பு வரவே மிரண்டு போய் மீண்டும் தமிழுக்கே வந்தார். பிரஷாந்த் நடித்த காதல் கடிதம் படத்தில் படு கிளாமர் காட்டி நடித்து ரசிகர்களை துடிக்க வைத்தார். அப்படியும் மார்க்கெட் தொடர்ந்து மக்கர் பண்ணவே, நடிப்பை விட்டு விட்டு படிப்பதற்காக அமெரிக்கா போனார். அங்கு படித்துக் கொண்டே வேலையும் பார்த்தார். இப்போது மீண்டும் சென்னைக்கேத் திரும்பி விட்டார் கஸ்தூரி. இந்த முறை நடிப்புக்காக முயற்சி எதையும் எடுக்கவில்லை கஸ்தூரி. மாறாக, பிரபல சினிமா நிறுவனம் ஒன்றின் தலைமைக் கணக்காளராக வேலை பார்க்கப் போகிறார். இத்தனை காலம் நடித்தேன், பிறகு படிக்கப் போனேன் இப்போது அலுவலக வேலை பார்க்கப் போகிறேன். மீண்டும் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும் கூட அதை நான் ஏற்கப் போவதில்லை. புதிய வேலையில் கவனம் சிதறக் கூடாது என்பதால், அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தப் போகிறேன் என்கிறார் கஸ்தூரி. கஸ்தூரி வராவிட்டாலும் நம் ஊர் ருசி கண்ட பூனைகள் விட்டுவிடுவார்களா. ஏதாவது சொல்லி கூட்டி வந்து ஒரு குத்தாட்டமாவது போட வைக்காமல் விடுவார்கள என்ன?

By Staff

கஸ்தூரியை ஞாபகம் இருக்கிறதோ? த்ரிஷாவோட சீனியர், முன்னாள் மிஸ் சென்னை, முன்னணி நடிகர்களுடன் கொஞ்ச காலம் ஓட்டியவர்.

இடையில் கவர்ச்சிக்குத் தாவி சரிப்படாததால் படிப்பதற்காக அமெரிக்கா போய் விட்டார். இப்போது மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி வந்துள்ளார், ஆனால் நடிப்பதற்கு அல்ல.

மிஸ் சென்னை பட்டம் வாங்கிய கஸ்தூரி, எல்லா அழகிகளும் செய்வது போலவே சினிமாவுக்கு வந்தார். பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அந்தக் கால முன்னணி நடிகர்களுடன் திறமை காட்டினார்.

கமல்ஹாசனின் மகளாக இந்தியனில் வந்து போனார்.

கோலிவுட்டில் நல்ல ஒரு ரவுண்டு வந்த கஸ்தூரி, பின்னர் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவே மலையாளம், கன்னடம் ஒரு வட்டமடித்தார்.

மலையாளத்தில் பலான பட ரேஞ்சுக்கு வாய்ப்பு வரவே மிரண்டு போய் மீண்டும் தமிழுக்கே வந்தார்.


பிரஷாந்த் நடித்த காதல் கடிதம் படத்தில் படு கிளாமர் காட்டி நடித்து ரசிகர்களை துடிக்க வைத்தார். அப்படியும் மார்க்கெட் தொடர்ந்து மக்கர் பண்ணவே, நடிப்பை விட்டு விட்டு படிப்பதற்காக அமெரிக்கா போனார். அங்கு படித்துக் கொண்டே வேலையும் பார்த்தார்.

இப்போது மீண்டும் சென்னைக்கேத் திரும்பி விட்டார் கஸ்தூரி. இந்த முறை நடிப்புக்காக முயற்சி எதையும் எடுக்கவில்லை கஸ்தூரி.

மாறாக, பிரபல சினிமா நிறுவனம் ஒன்றின் தலைமைக் கணக்காளராக வேலை பார்க்கப் போகிறார்.

இத்தனை காலம் நடித்தேன், பிறகு படிக்கப் போனேன் இப்போது அலுவலக வேலை பார்க்கப் போகிறேன். மீண்டும் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும் கூட அதை நான் ஏற்கப் போவதில்லை. புதிய வேலையில் கவனம் சிதறக் கூடாது என்பதால், அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தப் போகிறேன் என்கிறார் கஸ்தூரி.

கஸ்தூரி வராவிட்டாலும் நம் ஊர் ருசி கண்ட பூனைகள் விட்டுவிடுவார்களா.

ஏதாவது சொல்லி கூட்டி வந்து ஒரு குத்தாட்டமாவது போட வைக்காமல் விடுவார்கள என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X