கத்திச்சண்டையில் தமன்னாவுக்கு காத்திருக்கும் ஆப்பு?
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா. சம்பள விஷயத்தில் இரண்டு மொழிகளிலும் பாரபட்சம் காட்டாமல் ஒரே தொகையைக் கேட்கும் தமன்னா புரமோஷன் என்று வந்துவிட்டால் தமிழுக்கு ஓர வஞ்சனை செய்கிறார்.

ஹைதரபாத்திலேயே தங்கியிருப்பதால் தமிழ் படங்களை பொறுத்தவரை நடித்துக் கொடுத்து முடித்த அடுத்த நிமிடமே நாட் ரீச்சபிளுக்கு போய் விடுகிறாராம். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை. எங்கு கூப்பிட்டாலும் போய் படத்தை புரமோட் பண்ணுகிறார்.
கேட்டால் தமிழ் மீடியால அதிகம் லவ்வர் பத்திதான் விசாரிக்கிறாங்க... என்று அலுத்துக் கொள்கிறாராம். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆல்ரெடி சில புகார்கள் பெண்டிங் இருப்பதால் விரைவில் வெளியாகவிருக்கும் கத்தி சண்டைக்காக காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர். இந்த பட புரமோஷனுக்கு வரலைன்னா ரெட்கார்டுதானாம்.
Comments


Click it and Unblock the Notifications