Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சுற்றிவளைத்த ரசிகர்கள்: சமாளித்து சூதானமாக நடந்த கத்ரீனா- வைரல் வீடியோ
வான்கூவர்: கனடாவில் தன்னிடம் கோபித்துக் கொண்ட ரசிகர்களை நடிகை கத்ரீனா கைஃப் கையாண்ட விதம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தபாங் டூர் என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப், ஜாக்குலின், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர்.
இந்நிலையில் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் தபாங் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு கத்ரீனா தனது பாதுகாவலர்களுடன் காரில் ஏறச் சென்றார். அவரை காண காத்திருந்தவர்களில் ஒரு பெண் கத்ரீனா விருட்டென்று சென்றதை பார்த்து கடுப்பாகி எங்களுடன் எல்லாம் செல்ஃபி எடுக்க மாட்டீங்களோ என்று கூச்சலிட்டார்.
நாங்கள் ஒன்றும் உங்களுக்காக இங்கு காத்திருக்கவில்லை, சல்மான் கானுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். இதை பார்த்த கத்ரீனா திரும்பி வந்து அமைதியாக இருங்க என்று அந்த பெண்ணிடம் கூறினார்.
நிலைமையை புரிந்து கொண்ட கத்ரீனா பிற ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
தபாங் டூரில் 8 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கத்ரீனாவுக்கு ரூ. 12 கோடி சம்பளமாம்.