Don't Miss!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுடிதார், பட்டுப் புடவை வாங்கணுமா?... "ஐந்து சுந்தரி"யைக் கேளுங்க!
மலையாள நடிகை காவ்யா காவ்யா மாதவன் தனது சகோதரருடன் இணைந்து ஆன்லைனில் பிசினஸ் ஆரம்பித்துள்ளார். பட்டுப்புடவை, சுடிதார் என பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்வதற்காக லக்ஷய்.காம் என்ற இணையதள நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன், 2013 ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியான "ஐந்து சுந்தரிகள்' படத்துக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. திருமணம் விவகாரத்து என சில காலம் ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். கேரளாவில் பெண்களே இயக்கும் கால் டாக்ஸிகள் மிகவும் பிரபலம். இதை அடிப்படையாக வைத்து "ஷி டாக்ஸி' என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியிருக்கிறது. இதில் நடித்துள்ளார் காவ்யா மாதவன். இந்தப்படம் சுமாராகவே போனது.
ஆன்லைன் வர்த்தகம்
இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் இறங்கியுள்ளார். லக்ஷய்.காம் என்ற இணையதள நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.
ஆடைகள் விற்பனை
இதன் மூலம் பட்டுச் சேலைகள், சுரிதார்கள் உள்ளிட்ட பெண்களுக்கான உடைகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளார். இதன் தலைமை அலுவலகம் கொச்சியில் செயல்படும்.
சென்னை, பெங்களூருவில்
‘எனது சகோதரன் மிதுன் மாதவனுடன் இணைந்து ஆடை விற்பனை தொழிலில் இறங்கியுள்ளேன் என்று கூறியுள்ள காவ்யா மாதவன், சென்னை, பெங்களூருவிலும் கிளைகள் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
சினிமாவிலும் பிஸி
காவ்யா மாதவன் தற்போது, "ஆகாஷ்வாணி' என்ற படத்திலும், ஜீத்து ஜோஸப்பின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார், தனது திரையுலக மறு பிரவேசமும் வெற்றிகரமாகவே அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் காவ்யா மாதவன்.