மதம் மாறிய கீர்த்தி சாவ்லா!
கிறிஸ்தவரான மீரா எப்படி கோவிலுக்குள் நுழையலாம் என்று அவரிடம் கோவில்பாதுகாவலர்கள் கேட்டபோது, மீரா இந்து மதத்திற்கு மாறி விட்டதாக கூறி அங்கிருந்துஅவரை மீட்டுச் சென்றார் உடன் இருந்த தயாரிப்பாளர்.
ஆனால் தான் மதம் மாறவில்லை என்று அடுத்த நாள் கூறி பரபரப்பை மேலும்அதிகரித்தார். ஆனால் நிஜமாகவே ஒரு நடிகை மதம் மாறி விட்டார். மாறியவர் கீர்த்திசாவ்லா. மாறிய மதம் பெளத்தம்.
உயிர் எழுத்து, வேட்டை, 1966, பிறகு என ஏகப்பட்ட படங்களுடன் கீர்த்தி படுபிசியாக நடித்து வருகிறார். இந்த பிசியான நேரத்திலும் அவரால் பக்திக்கும் நேரம்ஒதுக்க முடிந்ததுதான் ஆச்சரியம்.
புத்த மதம் குறித்துக் கேள்விப்பட்ட அவர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாகபடித்துள்ளார்.
புத்தரின் வாழ்க்கை வரலாற்றால் ஈர்க்கப்பட்ட அவர் சொந்த ஊரான மும்பைக்குச்செல்லும்போதெல்லாம் அங்குள்ள புத்தர் கோவிலுக்குப் போய் அங்கு நடக்கும்சொற்பொழிவுகளை கேட்க ஆரம்பித்தார்.
புத்த மதத்தில் சேர்ந்துள்ளதால் மனதில் சாந்தம் குடியேறியுள்ளதாம். எதையுமேநிதானத்துடனும், அமைதியுடனும் பார்க்க முடிகிறது என்கிறார் கீர்த்தி.
புத்த மதத்தில் சேர்ந்து விட்டாலும் கூட, படங்களில் கிளாமராக நடிக்க அடம்பிடிப்பதில்லையாம் கீர்த்தி. சினிமா வேறு, பக்தி வேறு என்கிறாராம் கேட்டால்.
அம்மணிக்கு பக்தி இன்னும் முற்றிப் போய்விடவில்லை. எனவே ரசிகர்கள் பயப்படத்தேவையில்லை!


Click it and Unblock the Notifications