Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கருணாநிதியிடம் ஆசி பெற்ற கீர்த்தி
30 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி எழுதிய நூல் சாரப்பள்ளம் சாமுண்டி. இந்த நாவல் தற்போது திரை வடிவம் பெறுகிறது.
உளியின் ஓசை என்ற பெயரில் திரைப்படமாகும் இப்படத்தில், வினீத் சிற்பியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும், அக்சயாவும் நடிக்கின்றனர். சரத் பாபு ராஜராஜ சோழ மன்னனாக நடிக்கிறார். கவிஞர் இளவேனில் படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. 15 நாட்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை முதல்வரிடம் போட்டுக் காட்டினர். காட்சிகளைப் பார்த்த முதல்வர் நன்றாக வந்திருப்பதாக பாராட்டினார்.
இந்த படத்தின் நாயகியான கீர்த்தி சாவ்லா தனது 21வது பிறந்த நாளையொட்டி, கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்று அழரை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.
அப்போது உளியின் ஓசை படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாக கருணாநிதி, கீர்த்தியைப் பாராட்டினாராம்.
கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டும் என்று விரும்பிய கீர்த்தி அதுகுறித்து முதல்வரின் செயலகத்தை அணுகியபோது உடனடியாக அனுமதி கிடைத்ததாம்.
இதுகுறித்து கீர்த்தி சாவ்லா கூறுகையில், முதல்வரை சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாகும். ஆனால் உடனடியாக அதற்கான வாய்ப்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகப் பெரிய கெளரவம். இந்தப் படம் எனது திரையுலக வாழ்க்கையில் பெரிய மைல் கல்லாக அமையும். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.