Don't Miss!
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்க்கு ஜோடி... ஆவலை அடக்க முடியவில்லையாம் கீர்த்திக்கு!
தமிழ் சினிமாவில் அறிமுகமான இரண்டே படங்களில் முதல் நிலை நாயகியானவர்கள் இரண்டு நாயகிகள்தான். ஒருவர் நயன்தாரா. இன்னொருவர் இன்றைய இளைஞர்களின் சென்செஷன் கீர்த்தி சுரேஷ்.
'இது என்ன மாயம்' படம் கவிழ்த்தாலும் ரஜினிமுருகன் அம்மணியை தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாக்கிவிட்டது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரெமோவிலும் கீர்த்திதான் அவரது ஜோடி. தனுஷ், பாபி சிம்ஹா படங்களில் நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி, அடுத்ததாக விஜய்யின் புதிய படத்தில் நாயகியானதில், கோடம்பாக்க நாயகிகளின் தாய்க்குலங்களின் பொறாமைப் பார்வையில் வெந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி.
விஜய்யுடன் ஜோடி சேர்வதால் அவருக்கு, ரசிகர்களும் திரை உலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் கீர்த்திக்கும் ஏக மகிழ்ச்சி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய்சாருடன் இணைத்து நடிக்கப்போவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படம் தொடங்கும் நாளுக்காக கார்த்திருக்கிறேன். ஆவலை அடக்க முடியவில்லை. ஆதரவாளித்த அனைவருக்கும் நன்றி," என்றார்.