கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் இப்படி ஏமாத்திட்டாரே.. ச்ச ஒரு மாதிரி ஆகிடுச்சு பாவம்
சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். கோலிவுட்டில் திறமையான நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்த அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் இப்போது சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதை பார்த்து ரசிகர்களும் ஃபீல் செய்ய தொடங்கியிருக்கிறர்கள்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். இணைந்த கைகள் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் அரசியலிலும் நுழைந்து எம்.எல்.ஏவாகவும் மாறினார். அவரது மகள்தான் கீர்த்தி பாண்டியன், தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் அன்பிற்கினியாள், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவற்றில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அசோக் செல்வனுடன் காதல், திருமணம்: ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது ஆன் கேமராவில் மலர்ந்த காதல் ஆஃப் கேமராவிலும் தொடர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் இரண்டு பேரின் வீட்டுக்கும் தெரியவந்ததை அடுத்து; வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு வாழ்ந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகும் இரண்டு பேரும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டுகளாக ஜொலித்திருக்கிறார்கள்.
அசோக் செல்வனின் லைன் அப்: திருமணத்துக்கு பின்பு கீர்த்தி பாண்டியனை பொறுத்தவரை கொஞ்சம் பேசினால் என்ன, அஃகேனம் படங்களில் நடித்தார். அவரது கணவர் அசோக் செல்வன் கடைசியாக தக் லைஃப் படத்தில் முக்கியமான வேடத்தை ஏற்றிருந்தார். அடுத்ததாக கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். திறமை வாய்ந்த நடிகராக இருந்தாலும் இன்னும் அவருக்கான அங்கீகாரமோ,உயரமோ வரவில்லை என்பதுதான் எல்லோரின் கருத்தும். விரைவில் அவர் அந்த இடத்தை பிடித்துவிடுவார் என்று திரை ஆர்வலர்கள் ஆருடம் கூறியிருக்கிறார்கள்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஒரு நிகழ்ச்சியில் கணவனும், மனைவியும் கலந்துகொண்டார்கள். அப்போது தான் நின்ற இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல அசோக் நகர்ந்தபோது; அவர் தன்னை கட்டியணைக்க வருகிறாரோ என நினைத்து கீர்த்தி கைகளை விரிக்க; அசோக் அணைக்கவில்லை. உடனே கீர்த்தி பாண்டியனும், அசோக்கும் அதை சிரித்து சமாளித்துவிட்டார்கள்.
சூப்பர் காதல்: இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து, ச்ச கீர்த்திக்கு இப்படி ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டுவிட்டதே என்று ஃபீல் செய்துவருகிறார்கள். தற்போதைய கோலிவுட் ரியல் ஜோடிகளில் இவர்களும் மேட் ஃபார் ஈச் அதர் போல் வாழ்ந்துவருகிறார்கள். ஒருமுறை கீர்த்தியிடம் பயில்வான் ரங்காதன், 'உங்கள் வீட்டுக்குள் சண்டையாமே' என்று வழக்கம்போல் அநாகரீகமாக கேள்வி கேட்டார். அதற்கு கீர்த்தி பண்டியன் பக்குவமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் பதில் கொடுத்து பயில்வானை பல்பு வாங்க வைத்திருந்தார் எனபது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications
