தொடரி அப்டேட்... மேக்கப் இல்லாமல் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
மூன்று படங்கள் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை கீர்த்தி சுரேஷுக்கு. ஆனால் அதற்குள் விஜய் படம் ரேஞ்சுக்கு போய்விட்டார். விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் எப்படியோ... ஆனால் கீர்த்தி சுரேஷ் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் தொடரி. பாரம்பரிய நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் இது.

பிரபுசாலமன் படங்களில் எப்போதுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். மைனா, கும்கி, கயல் மூன்றிலுமே நாயகியை சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருந்தது. அதேபோல தொடரியிலும் நாயகியைச் சுற்றித்தான் கதை. இதில் ஒரு நடிகையின் டச்சப் கேர்ளாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மேக்கப் போட்டுவிடும் டச்சப் கேர்ளாக நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு இதில் மேக்கப்பே இல்லையாம். சுமாராக தெரிய வேண்டும் (மேக்கப் இல்லேன்னா பல நடிகைகள் சுமார்தானே!) என்பதற்காக மேக்கப் இல்லாமல் அப்படியே நடிக்க விட்டிருக்கிறார் பிரபு சாலமன்.

எனவே தொடரி படத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறது கீர்த்தி சுரேஷ் குடும்பம்.


Click it and Unblock the Notifications











