Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்னி கேரக்டரை ரிலாக்ஸ்டாக நடித்தேன்... இந்தக் கேரக்டருக்கு மகாநடி படம்தான் உதவி செஞ்சுது
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் வெளியாகியுள்ளது சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இருவருமே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளனர்.
ட்ரோல்களுக்கு
தரமான
பதிலடி
கொடுத்த
கீர்த்தி
சுரேஷ்..
பாராட்டித்
தள்ளும்
ரசிகர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகவுள்ளது. தற்போது அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள சாணிக் காயிதம் படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

பாராட்டை பெற்ற கீர்த்தி
ஆயினும் முதல் படமாக இருந்தாலும் செல்வராகவனும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். இதேபோல கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அவரது நடிப்பு படத்தின் பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ளது. அவரது நடிப்பு மெருகேறியுள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பொன்னி கேரக்டர்
படத்தில் பொன்னி என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆரம்பம் முதலே படத்தின் கேரக்டரில் அவரால் பொருந்தி சிறப்பாக நடிக்க முடிந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் மிகவும் சிறப்பான ஆதங்கம், கோபம் போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

கைகொடுத்த மகாநடி படம்
குறிப்பாக பழிவாங்க வேண்டும் என்று அவர் கூறும் இடத்தில் வில்லன்களை எப்படி கொல்ல வேண்டும் என்று குறிப்பிடும் காட்சியில் அவரது நடிப்பு பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க தனக்கு மகாநடி படம் சிறப்பாக கைக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரஷர் எடுத்துக் கொள்ளவில்லை
இதுகுறித்த பேட்டியில், மகாநடி படத்தில் நடிக்கும்போது தான் அதிகமான பிரஷரை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் அதுபோலல்லாமல் இந்தப் படத்தில் நடிக்க தான் எந்த பிரஷரையும் மண்டையில் போட்டுக் கொள்ளவில்லை என்றும் ரிலாக்சாக நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பொன்னி கதாபாத்திரம்
தினமும் சூட்டிங் முடிந்து வந்து, காமெடி காட்சிகளை பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அருண் மாதேஸ்வரன் அனுப்பிய சில வீடியோ காட்சிகளை மட்டும் தன்னுடைய மனதில் ஏற்றிக் கொண்டு பொன்னியின் கதாபாத்திரத்தை தான் டெவலப் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் அனுபவசாலி
அருண் மாதேஸ்வரன் மிகவும் அனுபவசாலி என்றும் இயக்கம் குறித்த தெளிவு அவரிடம் காணப்பட்டதாகவும் அவரிடம் தான் அதிகமாக கற்றுக் கொண்டதாகவும் கீர்த்தி தெரிவித்துள்ளார். இதேபோல செல்வராகவன் இயக்கத்தில் தான் பணியாற்றவில்லை என்றாலும் நடிகராக அவருடன் இணைந்து நடித்தது சிறப்பான அனுபவம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.