வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன் ஆனால்..கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த ஷாக்கிங் புகைப்படங்கள்!
சென்னை: தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
இந்த நிலையில் ஸ்பெயினில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன் என செம ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

சாவித்திரியை கண்முன்னே கொண்டுவந்து காட்டி
ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்து பட்டையை கிளப்பி கொண்டுள்ள கீர்த்தி சுரேஷிற்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் குவிகிறது. மகாநடி படத்தில் நடிகை சாவித்திரியை கண்முன்னே கொண்டுவந்து காட்டி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து அதிலும் வெற்றி கண்டார்.

பழங்குடியின பெண்ணாக
இப்பொழுது குட்லக் சகி என்ற மற்றுமொரு படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து வருகிறார். இந்த படம் மிக விரைவிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. நடிகர் ஆதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு தங்கையாக
முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது தங்கை வேடங்கள், சிறப்பு தோற்றங்களில் நடிக்க பலரும் தயங்கி கொண்டிருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து அனைவரையும் பாசத்தால் பிணைத்தார் கீர்த்தி சுரேஷ்.
Recommended Video

வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் பிளாக்பஸ்டர் வெற்றி கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பான்மையான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது . இதில் கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மெக்சிகோவில் படப்பிடிப்பு தளத்தில் மிகத் தீவிரமாக வசனங்களை படித்து கொண்டிருக்கின்றவாறு எடுத்த படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கிறேன் ஆனால் அதுவும் ஒரு ஃபேஷன் தான் என ஜாலியாக பதிவிட்டுள்ள இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது


Click it and Unblock the Notifications











