Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கீர்த்தியை நசுக்கிய நமீ!
ஜில் ஜில் ஜிகர்தண்டா போல இருக்கும் கீர்த்தி சாவ்லா தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் மும்பை கேர்ள். தமிழில் அறிமுகமான படம் ஆணை. அதில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார், ஆனால் செகண்ட் ஹீரோயினாக. முதல் ஹீரோயினாக வந்து போனவர் நச் நமீதா.
நமீதா என்ற பெருமலைக்கு முன்னால், கடுகு போலத் தோன்றினார் கீர்த்தி சாவ்லா. படத்திலும் கீர்த்தி சாவ்லாவுக்குப் பதில் நமீதாவின் கிளாமருக்கே ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார்கள், அர்ஜூனின் ஆணைப்படி!.
நமீதாவுக்கும், கீர்த்திக்கம் இடையே நடந்த கிளாமர் ஜல்லிக்கட்டில், யாராலும் பிடிக்க மடியாத திமிறும் காளையாக மாறி எல்லோரையும் திணறடித்துவிட்டார் நமீதா.
அவரது பிரமாண்ட அவதாரத்தக்கு முன்னால் கீர்த்தியால் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது.
அத்தோடு விட்டாரா நமீதா, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அத்தனையிலும் கவர்ச்சி மழை பொழிய வேண்டும் என்று கண்டிஷனே போட்டு விட்டார்.
ஆனால், அவர் அளவுக்கு கீர்த்தியால் இறங்கி வர முடியவில்லை. எப்போடா இந்தப் படம் முடியும், நமீதாவின் அலம்பலிலிருந்து தப்பிக்கலாம் என்ற நிலைக்கு அவர் போய் விட்டார்.
ஆணையில் பட்ட பாட்டை நினைத்துப் பார்த்த கீர்த்தி, இனிமேல் செகண்ட் ஹீரோயினாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.
ஆணையைத் தொடர்ந்து சில இரண்டாம் நாயகி வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அதை ரிஜக்ட் செய்து விட்டதால் அம்மணியிடம் இப்போது இரண்டு படங்கள் மட்டுமே கையில் இருக்கிறதாம்.
உயிர் எழுத்து மற்றும் 1999 (இண்டாவது படத்தில் விஜயகாந்த்தின் அண்ணன் மகன் ராஜசிம்மன்தான் நாயகன், அப்படியே சித்தப்பாவைப் போல உப்பி, ஊதி காணப்படுகிறார்!) ஆகிய இரு படங்களிலும் கீர்த்திதான் நாயகி.
இரு படங்களுக்கும் தனக்கு பெரய பிரேக்கைத் தரும் என்று நம்புகிறார் கீர்த்தி.
நல்ல கிளாமரைக் கொடுத்தால் பிரேக் தானாகவே வந்து விட்டுப் போகிறது என்கிறார்கள் லேட்டஸ்ட் கோலிவுட் நிலவரம் தெரிந்தவர்கள்!