Don't Miss!
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏன் கீர்த்தி சுரேஷ் திடீர் என்று இப்படி ஒரு முடிவு?
ஹைதராபாத்: இனி யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.
மரத்தை சுற்றி டான்ஸ் ஆடிவிட்டு செல்லத் தான் கீர்த்தி சுரேஷ் லாயக்கு. அவருக்கு நடிக்க வராது என்று கிண்டல் செய்தவர்களை நடிகையர் திலகம் படம் மூலம் மிரள வைத்துள்ளார் கீர்த்தி.
படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தியை தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கீர்த்தி
இந்த கீர்த்தி சுரேஷுக்குள் இப்படி ஒரு திறமை இருந்துள்ளதை நாம் பார்க்காமல் போய்விட்டோமே. நாக் அஸ்வின் கீர்த்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
படங்கள்
வாழ்க்கை வரலாற்று படம் தான் கீர்த்தி சுரேஷுக்கு பெயரும் புகுழும் வாங்கிக் கொடுத்துள்ளது. ஆனால் இனிமேல் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி.
நல்ல விஷயம்
வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பில் அசத்திய பிறகு ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளீர்கள் கீர்த்தி சுரேஷ்? வாழ்க்கை வரலாற்று படங்களில் தொடர்ந்து நடித்தால் அதுக்கு மட்டுமே தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறாரோ என்னவோ?
பாராட்டு
கீர்த்தி சுரேஷுக்கு செல்லும் இடமெல்லாம் பாராட்டாக உள்ளது. திரைத்துறையில் உள்ள ஜாம்பவான்கள் கூட கீர்த்தியை நேரில் அழைத்து பாராட்டுகிறார்கள். இதை பார்த்து அவரது குடும்பத்தார் பெருமை அடைந்துள்ளனர்.
கஷ்டம்
3-4 மணிநேரம் மேக்கப் போட்டு சாப்பிடக் கூட முடியாமல் தவித்தார் கீர்த்தி சுரேஷ். தன்னை கலாய்ப்பவர்களுக்கு முன்பு பெயர் வாங்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.