Don't Miss!
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மத்தவங்களுக்கு தான் பிரச்சனை ஆனால் எனக்கு அது ஒரு கிக்: கீர்த்தி சுரேஷ்
Recommended Video
சென்னை: எல்லாம் தெரிந்து தான் சினிமாவுக்கு வந்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்கிறார். போனி கபூர் அஜய் தேவ்கனை வைத்து தயாரிக்கும் இந்தி படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் அவர் சினிமா வாழ்க்கை பற்றி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
பிரச்சனை
நடிகர்கள், நடிகைகளுக்கு என்ன பிரச்சனை, அவர்கள் எல்லாம் ஜாலியாக, சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை நடிகர்கள், நடிகைகளுக்கும் கஷ்டம் உள்ளது.
குறை
நடிகர்கள், நடிகைகள் தங்களின் கஷ்டத்தை வெளியே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் தங்களின் சின்ன சின்ன ஆசைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். அவர்கள் எது செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள்.
சினிமா
நான் நடிகையானதன் மூலம் எந்த ஆசையையும் விட்டுக்கொடுக்கவில்லை. முன்பு போன்றே ஷாப்பிங் செல்கிறேன். நடிகையாக இருப்பது எனக்கு கஷ்டமாக இல்லை. ஒன்று வேண்டுமானால் மற்றொன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் நடிக்க வந்தேன்.
கிக்
வெளியே சென்றால் மக்கள் அவர்களை மொய்த்துக் கொள்கிறார்கள், எங்கேயும் போக முடியவில்லை என்று நடிகர்கள், நடிகைகள் வருத்தப்படுவார்கள். எனக்கு அந்த வருத்தம் இல்லை. மக்கள் மொய்த்துக் கொள்வது பிடித்துள்ளது. அதிலும் ஒரு கிக் உள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!