நடிகை கீர்த்தி சுரேஷூக்கு என்னாச்சு? இந்த டாப் ஹீரோ படத்தில் இருந்தும் விலகிட்டாராமே..?
சென்னை: பிரபல ஹீரோவின் படத்தில் இருந்தும் நடிகை கீர்த்தி சுரேஷ், விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழில், இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

மைதான்
இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்திலும் அவர் ஒப்பந்தம் ஆனார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது.

பெருமையாக...
இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது என்று கூறியிருந்தார்.

விலகினார்?
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இந்த செய்தி பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

பொன்னியின் செல்வன்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வனில் இருந்தும் அவர் ஏற்கனவே விலகியிருந்தார்.


Click it and Unblock the Notifications











