twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விபச்சாரத்தில் சிக்கிய நடிகை ஸ்வேதா: ட்விட்டரில் குமுறிய குஷ்பு

    By Siva
    |

    சென்னை: விபச்சார வழக்கில் நடிகை ஸ்வேதா பாசு சிக்கியுள்ள நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணின் முகத்தை மட்டும் ஏன் காட்டுகிறார்கள் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடிகை ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இதையடுத்து அவரது புகைப்படம் டிவி, செய்தித்தாள்களில் பெயருடன் வந்தது. ஆனால் அவருடன் சிக்கிய மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் பெயர் கூட வெளிவரவில்லை.

    இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    பெண்கள்

    பெண்கள்

    பெண்கள் விபச்சாரத்தில் சிக்கினால் அவரது புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால் ஆண்களின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடுவது இல்லை? அவருக்கு அந்த குற்றத்தில் சம பங்கு இல்லையா?

    விபச்சாரம்

    விபச்சாரம்

    விபச்சாரம் தண்டிக்கப்படும் குற்றம் என்றால் சம்பந்தப்பட்ட ஆணையும் அதே சட்டப் பிரிவில் கைது செய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையை நாடியதால் அவருக்கும் அந்த பிரிவின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும்.

    ஆண்

    ஆண்

    ஒரு பெண்ணின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் இருந்து சுகம் பெறும் ஆணுக்கு தான் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    ஸ்வேதா பாசு

    ஸ்வேதா பாசு

    பண கஷ்டத்தால் அவதிப்பட்டபோது விபச்சாரம் செய்தால் சம்பாதிக்கலாம் என்று சிலர் தனக்கு ஆசை வார்த்தை காட்டி இந்த தொழிலில் ஈடுபடுத்தியதாக ஸ்வேதா பாசு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Khushbu tweeted that, 'Woman's face n name is splashed all ovr wen arrested in prostitution..y withhold d identity of d guy?is he not equally quilty of d offence?'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X