பலாத்கார வழக்கில் தீர்ப்பு.. சிறுவன்னா மறந்துடலாமா? மன்னிச்சுடலாமா?: கொந்தளிக்கும் குஷ்பு!
சென்னை: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனை மன்னித்தோ மறந்தோவிடலாமா? என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிக்கிய சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோரே இந்த தண்டனை போதாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், பலாத்காரத்தில் ஈடுபட்டவன் சிறுவன் என்பதால் மறந்துவிடலாமா? மன்னித்துவிடலாமா? நாம் வேண்டுமானால் மறந்துவிடலாம்? ஆனால் அவனை மனிக்கிற உரிமை நமக்கு கிடையாது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரால் எப்படி மறக்கவோ? மன்னிக்கவோ முடியும்?
இன்னொருபுறம் இளம் பெண்ணை சீரழித்த அசாராம்பாபு இன்னமும் சுதந்திரமாக உலவ முடிகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











