twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிரண், கிரணாகவே ....

    By Staff
    |

    ரிஷி ராஜ் இயக்கத்தில் வளர்ந்து வரும் இது காதல் வரும் பருவம் படத்தில் கிரண், நடிகை கிரணாகவே வருகிறாராம்.

    ஜெமினி வந்த புதிதில் யார் இந்த புதுக் குதிரை என்று அத்தனை பேரும் வியர்த்து, வியர்ந்து பார்த்தார்கள். அந்த அளவுக்கு படு க்யூட்டாக இருந்த கிரண், போகப் போக கிளாமர் கடலில் முங்கி, நீச்சலடித்து சீக்கிரத்திலேயே ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டார்.

    அவரது நேரமோ என்னவோ உடலும், கிளாமரும் ரசிகர்களை கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. இதனால் சீக்கிரத்திலேயே பீல்ட் அவுட் ஆனார் கிரண்.

    இடையில் காணாமல் போயிருந்த கிரண், ஓரிரு குத்துப் பாட்டுக்களில் தலை காட்டியிருந்தார். இந்த நிலையில் இது காதல் வரும் பருவம் படத்தில் நடிகை கிரணாகவே நடிக்கிறாராம்.

    படத்தை இயக்கி வரும் ரிஷிராஜிடம் கிரணை இப்படத்துக்கு செலக்ட் செய்தது ஏன் என்று கேட்டேபாது, இந்தக் கேரக்டரை உருவாக்கும்போதே அதற்கு கிரண்தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்து விட்டேன்.

    கிரணை அணுகி கேரக்டரை சொன்னபோது நடிகை என்று மட்டும்தான் சொல்லியிருந்தேன். பிறகுதான் நீங்கள், நீங்களாகவே நடிக்கப் போகிறீர்கள் என்று கூறினேன்.

    அதைக் கேட்டு அவர் சந்தோஷப்பட்டார், உடனே ஒத்துக் கொண்டார். இப்படத்தில் கிரணின் இமேஜ் பாதிக்கப்படாத வகையில் காட்சிகளை வைத்துளளேன். அதேசமயம், அவரது ரசிகர்களுக்கு எது தேவையோ அது கண்டிப்பாக இருக்கும் என்றார் ரிஷிராஜ்.

    ரிஷிராஜ் பொத்தாம் பொதுவாக எல்லாம் இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் படம் முழுக்க கிரண் கவர்ச்சி களியாட்டம் ஆடியுள்ளாராம். இந்தப் படத்தின் மூலம் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக விட்டம் வரை பாய்ந்து பாய்ந்து கவர்ச்சி காட்டியுள்ளாராம்.

    கிரணைப் பிடித்த கிரகணம் விலகட்டும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X