Don't Miss!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பண மோசடி விவகாரம்: ஹைகோர்ட் உத்தரவுப்படி நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு
கொல்கத்தா: பணமோசடி விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவுப் படி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்தா எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ. 9 கோடி பணம் பெறப்பட்டது.
இந்தப் பணமானது 2 ஆண்டுகளில் 10 தவணைகளாக திருப்பித் தரப்படும் என்றும், தங்களது நிறுவனத்திலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே.மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், கூறியபடி ஷில்பாவின் நிறுவனம் பணத்தைத் திருப்பித் தரவில்லை.
இது தொடர்பாக எம்.கே.மீடியா நிறுவனம் கொல்கத்தா ஹைகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், ஷில்பா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் தேபஷிஸ் குகா என்பவர் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சாரணி போலீசில் புகார் செய்தார். இதை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.