Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பண மோசடி விவகாரம்: ஹைகோர்ட் உத்தரவுப்படி நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு
கொல்கத்தா: பணமோசடி விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவுப் படி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்தா எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ. 9 கோடி பணம் பெறப்பட்டது.
இந்தப் பணமானது 2 ஆண்டுகளில் 10 தவணைகளாக திருப்பித் தரப்படும் என்றும், தங்களது நிறுவனத்திலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே.மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், கூறியபடி ஷில்பாவின் நிறுவனம் பணத்தைத் திருப்பித் தரவில்லை.
இது தொடர்பாக எம்.கே.மீடியா நிறுவனம் கொல்கத்தா ஹைகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், ஷில்பா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் தேபஷிஸ் குகா என்பவர் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சாரணி போலீசில் புகார் செய்தார். இதை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.