twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பம்பரம் விட்டு, தேள் விட்டு, ஆப்பாயில் போட்டு... பாவம்தான் நடிகைகள்!

    By Sudha
    |

    சென்னை: நஸ்ரியாவின் தொப்புளுக்குப் பதில் வேறு ஒருவரை வைத்து டூப் போட்டு எடுத்து விட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இப்படி ஒரு தொப்புள் விவகாரம் பெரிதாவது தமிழ் சினிமாவில் புதிதில்லைதான்.. இதற்கு முன்பு சுகன்யாவின் தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

    இதுபோல பல படங்களில் இந்த தொப்புளை வைத்து நிறையவே சாதனைகள் படைத்துள்ளது நம்ம தமிழ் சினிமா.

    கதைப் பற்றுடன் படம் எடுத்த காலமெல்லம் ராக்கெட் வேகத்தில் பறந்து போய் விட்டது. சதைப் பற்றுக்கு தமிழ் சினிமா மாறி ரொம்ப காலமாகி விட்டது.

    பெண்களின் உடல் உறுப்புகளை கவர்ச்சிக் கண்காட்சியாக்கி எப்படியெல்லாம் அதை பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தி கற்பனை, புதுமை என்ற பெயரில் கொலவெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது கோலிவுட்.

    பாலியல் பார்வை...

    பாலியல் பார்வை...

    தொப்புளை, புனிதமாகச் சொல்வார்கள். ஆனால் அதை கவர்ச்சிப் பிரதேசமாக பார்க்க ஆரம்பித்தவர்கள் சினிமாக்காரர்கள்தான். அவர்கள் காட்டியதைப் பார்த்துத்தான் மக்களும் கெட்டு்ப போனார்கள்.

    கேமரா கோணம்...

    கேமரா கோணம்...

    ஒரு நடிகையாக கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்தும்போது, அதிலும் சேலையில் காட்டும்போது கேமராவை முதலில் தொப்புளில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள் அல்லது மார்பைக் காட்டுவர்கள்... அது என்னமோ.. என்ன மாயமோ.. தொப்புளில் இருந்து கேமராவை ஆரம்பித்தால்தான் அந்தக் காட்சி அவர்களுக்குத் திருப்தியாக வரும் போல.

    தொப்புளுக்கு 'பெருமை' சேர்த்த சில்க்...

    தொப்புளுக்கு 'பெருமை' சேர்த்த சில்க்...

    சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா போன்ற கவர்ச்சி நடிகைகளின் தொப்புளை விதம் விதமாக பல கோணங்களில் காட்டியது அந்தக் காலத்துப் படங்கள். இன்று வரை அந்த ஏரியாவிலிருந்து தமிழ் சினிமாவின் கேமராக் கண்கள் விலகாமலேயே இருக்கிறது...ஜெயமாலினி இந்த விஷயத்தில் 'கின்னஸ்' சாதனை படைத்தவர்.

    அடுத்த கட்டம்

    அடுத்த கட்டம்

    இப்படி வெறுமனே தொப்புளைக் காட்டிக் கொண்டிருந்த நிலையில் தமிழ் சினிமாவின் தொப்புள் கலாச்சாரத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அதாவது விதம் விதமான தொப்புள் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி...!

    சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்ட விஜயகாந்த்.

    சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்ட விஜயகாந்த்.

    இதில் முக்கியமான படம் சின்னக் கவுண்டர்தான். படம் முழுக்க அவ்வளவு கெளரவமாக காட்டுவார்கள் விஜயகாந்த்தை. அவரைப் பார்த்தால் ஊரே எழுந்து நிற்கும், தோளில் போட்ட துண்டு இடுப்புக்கு வரும்.. எல்லோரும் கவுண்டரே என்று மரியாதையாகக் கூப்பிடுவார்கள்.. உருகுவார்கள்... ஆனால் விஜயகாந்த்தோ, பொறுப்பே இல்லாமல் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் வி்ட்டு விளையாடிக் கொண்டிருப்பார்.

    நக்மா தொப்புளில் ஆப்பாயில் போட்ட பிரபுதேவா

    நக்மா தொப்புளில் ஆப்பாயில் போட்ட பிரபுதேவா

    கவுண்டரே இப்படி இருந்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா.. 'கவுண்டர்' கொடுக்க வேண்டாம்... ஒரு படத்தில் நக்மாவின் வயிற்றுப் பகுதியில் ஆப் பாயில் போட்டு தனது பலத்தை நிரூபிப்பார் பிரபுதேவா.

    ரோஜா வயிற்றில் தேள்..

    ரோஜா வயிற்றில் தேள்..

    அதே பிரபுதேவா, இன்னொரு படத்தில் ரோஜாவின் தொப்புளில் தேளை விட்டு விளையாடி, இரு ஹீரோயின்களிடமும் தனது சாகசத்தை நிறைவேற்றி சாதனை படைத்திருப்பார்.

    சரத்குமார் செய்த வேலையைப் பாருங்க...!

    சரத்குமார் செய்த வேலையைப் பாருங்க...!

    இவர்களெல்லாம் இப்படிச் செய்தால் சரத்குமார் சும்மா இருப்பாரா... தலைவராச்சே... அவரிடம் சிக்கியவர் நமீதா. ஏய் படத்தில் ஒரு பாடல் காட்சியின்போது நமீதாவை அம்புட்டு கவர்ச்சியாக காட்டியிருப்பார்கள். சரத்குமாரும், நமீதாவின் தொப்புளில் தேங்கிய நீரை வாயை வைத்து உறிஞ்சிக் குடித்து குதூகலிப்பார்.... இந்தப் பாடலைப் பார்த்த பிறகு அருவிகளைப் பார்த்தாலே நமீதா ஞாபகம்தான்.. 'அர்ஜூனா அர்ஜூனா' என்று முன்பு இடி இடிக்கும்போது பாதுகாப்புக்காக சொல்வார்கள்.. ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு அந்த வார்த்தையைக் கேட்டால் 'ஏய்'... என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    ஆயில் 'பாத்'தும்....

    ஆயில் 'பாத்'தும்....

    பல படங்களில் ஹீரோயின்கள் அல்லது கவர்ச்சி நாயகிளின் தொப்புளில் எண்ணைய் ஊற்றுவது, மண் அள்ளிப் போட்டு விளையாடுவது, விரல்களால் கோலம் போடுவது என்று ரொம்பவே வளர்ந்தது தமிழ் சினிமா.

    ஆத்துத் தண்ணீரில் அபிஷேகம்...

    ஆத்துத் தண்ணீரில் அபிஷேகம்...

    செளந்தர்யா என்று ஒரு படம். இதில் ஹீரோ கோவிந்த், ஹீரோயின் ரீத்து சென்னை, ஆற்றில் படுக்க வைத்து அவரது தொப்புளில் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றி அபிஷேகம் செய்கிறார்.. ரொம்ப பவ்யமாக.. அவரது வயிற்றில் என்ன தீயா பிடித்து எரிகிறது.. இப்படி தண்ணீரை அள்ளி ஊற்ற... என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

    பூவைத் தூக்கி எறிந்து...

    பூவைத் தூக்கி எறிந்து...

    பல படங்களில் ஹீரோயின் தொப்புள் மீது பூக்களைத் தூக்கி வீசியும், சிலர் அடித்தும், சிலர் ஒரு கண்ணால் குறி பார்த்து எறிந்தும் விளையாடுவார்கள்.. கமல்ஹாசன் நிறையப் படங்களில் இதை தவறாமல் செய்து நல்ல அனுபவம் உடையவர்... பூவை சரியாக டார்கெட் பார்த்து எறிந்த பிறகு அவர் ஒரு புன்னைகை பூப்பார் பாருங்க.. தலைவா நீங்களுமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

    பழங்களையும் ..

    பழங்களையும் ..

    அது மட்டுமல்லாமல், பல படங்களில் படுக்கை அறைக் காட்சிகளில் திராட்சைப் பழங்களை தொப்புளில் வைத்து வாயால் எடுத்துச் சாப்பிடுவது (கையால் எடுத்துச் சாப்பிட்டால் சாமிக்கு ஆகாது போல)... ஹீரோயினை படுக்க வைத்து பழங்களை உருட்டி விளையாடுவது.. சிலர் படுக்கையில் படுத்தமானிக்கு, எறிந்து விளையாடுவார்கள்.. இப்படி பழ விளையாட்டும் பல படங்களில் பட்டையைக் கிளப்பியுள்ளது.

    நிறையச் சொல்லலாம்.. அந்த இடத்தை விட்டு எழுந்திருச்சு வாங்கய்யா... அங்கேயே குந்திக் கொண்டிருந்தால்.. ஹாலிவுட்டுக்கு என்னிக்குப் போவது....!

    English summary
    Here is a round up on the navel scenes in Tamil films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X