Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கெளஸின் பவுசு!
ஒரு காலத்தில் ஓஹோவென பிசியாக இருந்த கெளசல்யா இப்போது டிவிபெட்டிக்குள் முடங்கி விட்டார். சின்னத் திரையே வசதியாக, செளகரியமாகஇருப்பதால் பெரிய திரைக்கு பெரிய கும்பிடாக போடுகிறார்.
கார்த்திக், அப்பாஸ், பிரபுதேவா என செகண்ட் ஸ்டிரிங் நாயகர்களுடன் பெரியரவுண்டு அடித்தவர் கெளஸ். மும்பை மற்றும் கேரள நாயகிகளின் குவியலால் ஓரம்கட்டப்பட்டார். இருந்தாலும் கன்னடம், மலையாளம் என வேற ரூட்டில் போனதால்கொஞ்ச காலம் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடிந்தது.
இப்போது எல்லாம் போய் டிவி நடிகை ஆகி விட்டார் கெளசல்யா. சன் டிவியில்வெளியான மனைவி சீரியல், கெளஸுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.இதையடுத்து சில புதுப் படவாய்ப்புகள் வந்தன. ஆனால் கெளசல்யா எதையுமேஒப்புக் கொள்ளவில்லை.
சொத்தை காரணங்களைக் கூறி தேடி வந்த தயாரிப்பாளர்களை விரட்டி அடித்தார்.எல்லாம் அம்மணிக்கு தமிழ் சினிமா மீதுள்ள கோபம்தான் காரணம். ஏனாம்? தமிழில்நல்ல படங்களே வருவதில்லை.
நல்ல இயக்குநர்களின் படத்தில் நடிக்கவே நான் விரும்பகிறேன். சின்ன ரோலாகஇருந்தாலும் நல்ல வேடமாக இருந்தால்தானே நடிக்க முடியும். அதனால்தான் தமிழ்படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போடுகிறார் கெளசல்யா.
ஒரு காலத்தில் தமிழில், கிடைத்த வேடங்களையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டுவிழுந்து விழுந்து நடித்து டப்பு தேத்தியதை மறந்து விட்டு இப்படிப் பேசும்கெளசல்யா, மலையாளம், கன்னடப் படங்கள் என்றால் மறுப்பு ஏதும் சொல்லாமல்ஒத்துக் கொண்டு ஓடோடி உழைக்கிறாராம்.
இப்போது தெலுங்கிலும் அம்மணிக்கு ஒரு படம் கையில் இருக்கிறதாம். கூட்டிக்கழித்துப் பார்த்தால் கெளசல்யா கையில் 2 படங்கள்தான் இருக்கிறது என்கிறார்கள்மேட்டர் தெரிந்தவர்கள்.
இரண்டிலும் கூட கெளஸ் ஹீரோயின் இல்லையாம். இப்படி இருக்கையில் வருகிறதமிழ்ப் படங்களையும் தட்டி விட்டு பந்தா விட்டு வருகிறார் கெளஸ்.
ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம், அந்த கதைதான் போங்க!