twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்!

    By Mayura Akilan
    |

    KR Vijaya returns to silver screen after 2 years
    புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்.

    கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் 'தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார்.

    ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்தா மற்றும் வெண்மணி படங்களை இயக்கியவர்.

    பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா சுமார் 2 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம். இந்த படத்தில் நிழல்கள் ரவி, மீனாள், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    படத்திற்கு ஷாம் டி.ராஜ் இசையமைத்துள்ளார். ஜி.சிவசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஓகேனக்கல், பாலக்கோடு, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் நடத்தி முடித்துள்ளனர்.

    தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. விரைவில் படம் வெளியிடப்பட உள்ளது.

    English summary
    Veteran actress K R Vijaya is returning to acting after 2 year break
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X