twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    17 வயதில் குடும்ப நண்பரால்..பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல் !

    |

    சென்னை : நடிகையும் எழுத்தாளருமான குப்ரா சைட், குடும்ப நண்பர் ஒருவரால் இளம் வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

    தனது குடும்பம் பண கஷ்டத்தில் இருந்த போது, இந்த கொடுமைகளை தான் அனுபவித்ததாக நடிகை குப்ரா சைட் கூறியுள்ளார்.

    பல வருடங்கள் கழித்து நான், தான் அனுபவித்த பாலியல் கொடுமையை அம்மாவிடம் சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார்.

    பீஸ்ட், வலிமை சாதனையை ஓரங்கட்டிய விக்ரம்...இரண்டே நாளில் 100 கோடி கிளப் பீஸ்ட், வலிமை சாதனையை ஓரங்கட்டிய விக்ரம்...இரண்டே நாளில் 100 கோடி கிளப்

    நடிகை குப்ரா சைட்

    நடிகை குப்ரா சைட்

    மாடல் மற்றும் நடிகையுமான குப்ரா சைட், பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல விளம்பரங்களில் மாடலாகவும் பணியாற்றி உள்ளார். நெட்ஃபிக்ஸில் ஒளிபரப்பான சேக்ரட் கேம்ஸில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் குப்ரா சைட். இவர் தற்போது, "ஓபன் புக்: நாட் டூ மெமோயர் " என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

    17வயதில் பாலியல் தொல்லை

    17வயதில் பாலியல் தொல்லை

    அந்த புத்தகத்தில், நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சியூட்டும் தகவலை எழுதியுள்ளார். என் 17வது வயதில் என் வாழ்க்கையில் அந்த கொடுமை நிகழ்ந்தது. குடும்ப நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த அந்த நபர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். என் குடும்பம் பண நெருக்கடியில் இருந்த போது பண உதவிகளை செய்து வந்த அந்த 'X' நல்லவர் போல நடித்தார்.

    கன்னித்தன்மையை இழந்தேன்

    கன்னித்தன்மையை இழந்தேன்

    என் குடும்பத்திற்கு பல உதவிகளை செய்து எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தான் அந்த 'X', அம்மாவின் கண் முன் குட்டி என்று செல்லமாக அழைப்பார். ஆனால், அம்மாவிற்கு பின்னால் முத்தம் கொடுப்பார். அந்த குடும்ப நண்பரால் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் கொடுமையில் சிக்கி தவித்தேன். முதல் முறையாக 'X' நபரால் கன்னித்தன்மையை இழந்ததாகவும் நடிகை குறிப்பிட்டுள்ளார்.

    வாழ்க்கை விசித்திரமானது

    வாழ்க்கை விசித்திரமானது

    மேலும் அந்த X நபர் பாலியல் தொல்லை குறித்து குடும்பத்தினரிடம் சொன்னால், அது உன்னையும், உன் குடும்பத்தையும் அழித்துவிடும் என்று மிரட்டினார்.பல ஆண்டுகள் மனவேதனையிலும் குழப்பத்திலும் தவித்தேன்.ஆனால், நாட்கள் செல்ல செல்ல அம்மாவின் போனை அந்த நபர் எடுப்பதை தவிர்த்துவிட்டார். அப்போதுதான் வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது என்று எனக்கு புரிந்தாக நடிகை குப்ரா சைட் கூறியுள்ளார்.

    மனவேதனை

    மனவேதனை

    பல வருடங்கள் கழித்து தான், நான் அனுபவித்த அந்த கொடுமையை அம்மாவிடம் சொல்ல முடிந்தது என்றும், இதைக்கேட்ட தாயார் மிகவும் மனமுடைந்து என்னிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் நடிகை குப்ரா சைட் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகையின் இந்த பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல மகளீர் அமைப்புகளும் நடிகைக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர். மேலும், இந்த நபர் யார் என்று கேட்டு வருகின்றனர்.

    English summary
    Kubbra Sait spoke about being sexually abused at 17.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X