Don't Miss!
- Finance லிங்கிடுன்-ல் 'open to work' பேட்ஜை பயன்படுத்தாதீங்க! ஹெச்ஆர் அதிகாரிகள் எச்சரிக்கை..!
- News சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குட்டி ராதிகாவுக்கு குமாரசாமி தந்த ரூ 65 கோடி 'காதல் பரிசு'!
இயற்கை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான குட்டி ராதிகா, கன்னட படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இரு வருடங்களுக்கு முன் குட்டி ராதிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டு திடீரென மாயமானார்.
அவர் எங்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் திடீரென ஒரு வயது குழந்தையுடன் பெங்களூர் வந்தார். அந்த குழந்தை எனது குழந்தை என்று அறிமுகம் செய்தார். அக்குழந்தையின் தந்தை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி என பரபரப்பன அறிவிப்பையும் வெளியிட்டார்.
அக்குழந்தைக்கு சமிக்ஷா கே.சாமி என்று பெயரிட்டு இருந்தார். குமாரசாமி இதனை மறுக்கவில்லை. கடந்த வருடம் குட்டி ராதிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் குமாரசாமி பங்கேற்று, குட்டி ராதிகாவுக்கு கேக் ஊட்டி போஸ் கொடுத்து மகிழந்தார்.
இப்போது, பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு டிவி சேனலின் நிர்வாகியாக உள்ளார் குட்டி ராதிகா. இந்த சேனலை அவருக்காக தனது பணம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி வாங்கிக் கொடுத்தவர் குமாரசாமிதான்.
இதனை குட்டி ராதிகாவே சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேனலின் மதிப்பு ரூ.65 கோடியாம். 'சமயா' என்ற பெயரில் இயங்கும் இந்த சேனலின் நிர்வாக இயக்குநராக உள்ளார் குட்டி ராதிகா.
கர்நாடக கட்சிகள் குமாரசாமி - குட்டி ராதிகா பிரச்சினையை பெரிதாக கிளற முயன்றன. ஆனால் ஏனோ பின்னர் அப்படியே அமைதியாகிவிட்டது விவகாரம்!