Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
குட்டி ராதிகாவுக்கு குமாரசாமி தந்த ரூ 65 கோடி 'காதல் பரிசு'!
இயற்கை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான குட்டி ராதிகா, கன்னட படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இரு வருடங்களுக்கு முன் குட்டி ராதிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டு திடீரென மாயமானார்.
அவர் எங்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் திடீரென ஒரு வயது குழந்தையுடன் பெங்களூர் வந்தார். அந்த குழந்தை எனது குழந்தை என்று அறிமுகம் செய்தார். அக்குழந்தையின் தந்தை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி என பரபரப்பன அறிவிப்பையும் வெளியிட்டார்.
அக்குழந்தைக்கு சமிக்ஷா கே.சாமி என்று பெயரிட்டு இருந்தார். குமாரசாமி இதனை மறுக்கவில்லை. கடந்த வருடம் குட்டி ராதிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் குமாரசாமி பங்கேற்று, குட்டி ராதிகாவுக்கு கேக் ஊட்டி போஸ் கொடுத்து மகிழந்தார்.
இப்போது, பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு டிவி சேனலின் நிர்வாகியாக உள்ளார் குட்டி ராதிகா. இந்த சேனலை அவருக்காக தனது பணம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி வாங்கிக் கொடுத்தவர் குமாரசாமிதான்.
இதனை குட்டி ராதிகாவே சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேனலின் மதிப்பு ரூ.65 கோடியாம். 'சமயா' என்ற பெயரில் இயங்கும் இந்த சேனலின் நிர்வாக இயக்குநராக உள்ளார் குட்டி ராதிகா.
கர்நாடக கட்சிகள் குமாரசாமி - குட்டி ராதிகா பிரச்சினையை பெரிதாக கிளற முயன்றன. ஆனால் ஏனோ பின்னர் அப்படியே அமைதியாகிவிட்டது விவகாரம்!