Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
துள்ளாத துள்ளல் துள்ளல் என்ற படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும்இயக்குனர் பிரவீன்காந்த், அடுத்து முக்தா, ஆர்ட் என்று இரு படங்களை இயக்கப் போகிறாராம்.ஜோடி, ஸ்டார் ஆகிய படு சுமார் படங்களை இயக்கிய பிரவீன் காந்தை வைத்து ரட்சகன் என்ற படத்தைஎடுத்தார் தயாரிப்பாளர் குஞ்சுமோன். அத்தோடு சினிமாவை விட்டே காணாமல் போனார் குஞ்சு.ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்துக் கொண்டே முன்னேறி மலையாளத்தில் சீன் படங்கள் எடுத்து பெரிய ஆள்ஆகி, தென் இந்தியாவின் பிரமாண்டமான தயாரிப்பாளர் என்ற இடத்தைப் பிடித்தவர் மோன். அவரதுவாழ்க்கையையே திசை மாற்றி கோலிவுட்டையே காலி செய்ய வைத்தார் பிரவீன்காந்த்.இதன் பின்னர் இவரை வைத்து படமெடுக்க யாருக்கும் தைரியம் வரவில்லை. இதையடுத்து சேரன்,எஸ்.ஜே.சூர்யா வரிசையில் தானே ஹீரோவானார்.தானே கதை, திரைக்கதை, வசனமும் எழுதி துள்ளல் என்ற படத்தை எடுத்தார்.பஞ்சாபிக் கட்டையான குர்லின் சோப்ராவையும், மும்பையில் இருந்து சோனிகா என்ற உருட்டுக் கடடையையும்இழுத்து வந்து ஹீரோயின்களாக்கினார். இருவருமே இந்திப் படங்களில் சைட் டான்ஸர்களாக இருந்தவர்கள்.இருவருமே எள் என்றால் ஆயில் ரகம். ஸ்பாட்டில் டைரக்டர் சொன்னதை அப்படியே செய்து காட்டினர்.இருவருமே போட்டி போட்டுக் கொண்டு காட்டிய கிளாமர் பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு அந்தஸ்டில்கள் மிகவும் யூஸ்புல்லாக இருந்தன. சில ஸ்டில்கள் ஒரு மாதிரியான சினிமா பத்திரிக்கைகளின் நடுப்பக்கத்தை நிறைத்தன.படம் எடுத்து முடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. குர்லினுக்கும் சோனிகாவுக்கும் வயதும்ஏறிக் கொண்டே போகிறது. இதில் சோனிகா காணாமல் போய்விட, குர்லின் மட்டும் தெலுங்கு, கன்னடம் என்றுசான்ஸ் தேடி தனது கலச் சேவையை தொடர்ந்து வருகிறார்.பிரவீன்காந்துக்கு முடியெல்லாம் கூட கொட்டி விட்டது. ஆனால், பெட்டியை விட்டு பாம்பு.. ஸாரி படம்வெளியில் வந்தபாடில்லை.இதையடுத்து படம் எடுக்க தான் பட்ட பாட்டை ஒரு புத்தகமாகவே எழுதி கண்ணீருடன் வெளியிட்டார் பிரவீன்.அப்போதும் கோடம்பாக்கம் அசைந்து தரவில்லை. படத்தை வாங்க ஆளில்லை.இதையடுத்து துள்ளலை இப்போதைக்கு மறந்துவிட்டு முக்தா, ஆர்ட் ஆகிய படங்களுக்குத் தயாராகி வருகிறார்ப்ரவீண். இதில் முக்தாவில் ஹீரோ இவர் தானாம். ஆர்ட் படத்தில் மட்டும் வேறு ஒருவராம்.இந்த படங்களுக்கும் படு லுக்கான ஹீரோயின்களைத் தேடுகிறார்களாம்.
துள்ளல் என்ற படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும்இயக்குனர் பிரவீன்காந்த், அடுத்து முக்தா, ஆர்ட் என்று இரு படங்களை இயக்கப் போகிறாராம்.
ஜோடி, ஸ்டார் ஆகிய படு சுமார் படங்களை இயக்கிய பிரவீன் காந்தை வைத்து ரட்சகன் என்ற படத்தைஎடுத்தார் தயாரிப்பாளர் குஞ்சுமோன். அத்தோடு சினிமாவை விட்டே காணாமல் போனார் குஞ்சு.
ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்துக் கொண்டே முன்னேறி மலையாளத்தில் சீன் படங்கள் எடுத்து பெரிய ஆள்ஆகி, தென் இந்தியாவின் பிரமாண்டமான தயாரிப்பாளர் என்ற இடத்தைப் பிடித்தவர் மோன். அவரதுவாழ்க்கையையே திசை மாற்றி கோலிவுட்டையே காலி செய்ய வைத்தார் பிரவீன்காந்த்.
இதன் பின்னர் இவரை வைத்து படமெடுக்க யாருக்கும் தைரியம் வரவில்லை. இதையடுத்து சேரன்,எஸ்.ஜே.சூர்யா வரிசையில் தானே ஹீரோவானார்.
தானே கதை, திரைக்கதை, வசனமும் எழுதி துள்ளல் என்ற படத்தை எடுத்தார்.
பஞ்சாபிக் கட்டையான குர்லின் சோப்ராவையும், மும்பையில் இருந்து சோனிகா என்ற உருட்டுக் கடடையையும்இழுத்து வந்து ஹீரோயின்களாக்கினார். இருவருமே இந்திப் படங்களில் சைட் டான்ஸர்களாக இருந்தவர்கள்.
இருவருமே எள் என்றால் ஆயில் ரகம். ஸ்பாட்டில் டைரக்டர் சொன்னதை அப்படியே செய்து காட்டினர்.
இருவருமே போட்டி போட்டுக் கொண்டு காட்டிய கிளாமர் பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு அந்தஸ்டில்கள் மிகவும் யூஸ்புல்லாக இருந்தன. சில ஸ்டில்கள் ஒரு மாதிரியான சினிமா பத்திரிக்கைகளின் நடுப்பக்கத்தை நிறைத்தன.
படம் எடுத்து முடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. குர்லினுக்கும் சோனிகாவுக்கும் வயதும்ஏறிக் கொண்டே போகிறது. இதில் சோனிகா காணாமல் போய்விட, குர்லின் மட்டும் தெலுங்கு, கன்னடம் என்றுசான்ஸ் தேடி தனது கலச் சேவையை தொடர்ந்து வருகிறார்.
பிரவீன்காந்துக்கு முடியெல்லாம் கூட கொட்டி விட்டது. ஆனால், பெட்டியை விட்டு பாம்பு.. ஸாரி படம்வெளியில் வந்தபாடில்லை.
இதையடுத்து படம் எடுக்க தான் பட்ட பாட்டை ஒரு புத்தகமாகவே எழுதி கண்ணீருடன் வெளியிட்டார் பிரவீன்.அப்போதும் கோடம்பாக்கம் அசைந்து தரவில்லை. படத்தை வாங்க ஆளில்லை.
இதையடுத்து துள்ளலை இப்போதைக்கு மறந்துவிட்டு முக்தா, ஆர்ட் ஆகிய படங்களுக்குத் தயாராகி வருகிறார்ப்ரவீண். இதில் முக்தாவில் ஹீரோ இவர் தானாம். ஆர்ட் படத்தில் மட்டும் வேறு ஒருவராம்.
இந்த படங்களுக்கும் படு லுக்கான ஹீரோயின்களைத் தேடுகிறார்களாம்.