Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
குஷ்பு, ஜோதிகா, தேவயானி, அமலாபால்… தமிழ்நாட்டு மருமகள்கள் ஆன நடிகைகள்
தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விட்டால் போதும் சினிமா நடிகைகளைத் தங்கள் வீட்டுப் பெண்போல பாவித்து கொண்டாடுவார்கள்.
சில தீவிரமான ரசிகர்களோ நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்திவிடுவார்கள்.
குஷ்பு, ஜோதிகா, தேவயானி, சோனியா அகர்வால் போன்ற வட இந்திய நடிகைகளும், அமலாபால், நந்தனா உள்ளிட்ட மலையாள நடிகைகளும் சிலர் தமிழ்நாட்டிற்கு வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தமிழ்நாட்டிற்கு மருமகள்களாகவும் மாறிவிட்டனர்.
சினிமாவில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இதுபோல தமிழ்நாட்டிற்கு மருமகள்கள் ஆன நடிகைகள் பலர் இருக்கின்றனர். மேற்கொண்டு படியுங்களேன்.
குஷ்பு
90 களில் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகை குஷ்பு. தமிழக ரசிகர்கள் முதன்முதலாக கோவில் கட்டும் அளவிற்கு போனது குஷ்புவிற்குத்தான். தமிழக இயக்குநர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகிவிட்டார்.
ரோஜா
90 களில் கவர்ச்சியான சிரிப்பால் தமிழக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆந்திரதேசத்து நடிகை, தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வமணியை காதலித்து கரம் பிடித்து தமிழகத்தின் மருமகளானார்.
ஜோதிகா
மும்பை வரவான ஜோதிகா தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத நடிகையாக பத்தாண்டுகள் வரை கோலோச்சினார். தன்னுடன் நட்பாக இருந்த சூர்யாவை காதலித்து மணந்து கொண்டு சிவகுமார் வீட்டு மருமகளாக சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.
தேவயாணி
மும்பையில் இருந்து தமிழ்பேசத் தெரியாமல் சின்னப் பெண்ணாக வந்த தேவயானியை விரட்டி விரட்டி காதலித்து வீட்டை எதிர்த்து கரம்பிடித்தார் இயக்குநர் ராஜகுமாரன்.
சேரன் பாண்டியன் ஸ்ரீஜா
கே.எஸ்.ரவிக்குமார் சேரன்பாண்டியன் படத்தில் அறிமுகப்படுத்திய நடிகை ஸ்ரீஜா, தமிழ்நாட்டில் அமைச்சர் அரங்கநாயகத்தின் மகனை திருமணம் செய்துகொண்டார்.
நந்தனா
சில படங்களில் நடித்தாலும் அழகான நடிகை என்று பெயர் பெற்றவர் நந்தனா. இயக்குநர் பாரதிராஜாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டு தமிழக மருமகளாகிவிட்டார்.
மானஷா
மலையாளக்கரையோரம் பிரபல நடிகையாக இருந்த மானஷா தமிழ்நாட்டின் விக்ராந்தை கரம்பிடித்து தமிழகத்தில் தங்கிவிட்டார்.
அமலாபால்
இப்போது நடிகை அமலாபால் தமிழகத்து இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து கரம்பிடித்து தமிழ் வீட்டுப் பெண்ணாகிவிட்டார்.
சின்னத்திரை நாயகிகள்
சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் சாண்ட்ரா தொடங்கி சமீபத்திய ஸ்ரீஜா வரை பல நடிகைகள் தமிழ்நாட்டு ஹீரோக்களை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆகிவருகின்றனர்.
மனதில் மட்டுமல்ல
தமிழ்நாட்டு ரசிகர்கள் பிற மாநில நடிகைகளுக்கு தங்களின் மனதில் இடம் கொடுக்கின்றனர். அதேசமயம் தமிழக இயக்குநர்களும், நடிகர்களும், தங்களின் படங்களில் வாய்ப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாது வாழ்க்கையிலும் இணைந்து மருமகள்களாக தமிழ்நாட்டிலேயே தங்கவைத்துவிடுகின்றனர்.