கடவுளை அவமதித்தேனா-குஷ்பு மறுப்பு

By Staff

Kushboo
பார்த்திபன், சாயா சிங் ஜோடியாக நடிக்கும் வல்லமை தாராயோ படத்தின் தொடக்க விழா கடந்த 22ம் தேதி சென்னை தி.நகரில் நடந்தது. படத்தை இயக்கப் ேபாவது மதுமிதா.

இதில் எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் அம்மனின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தயின் சிலை அருக போடப்பட்ட நாற்காலி குஷ்புவுக்கு ஒதுக்கப்பட்டது. செருப்பு அணிந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து விழாவை ரசித்தார் குஷ்பு.

இந் நிலையில் கடவுள் சிலையை அவமதிக்கும் வகையிலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் குஷ்பு நடந்து கொண்டதாகக் கூறி கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்து முன்னணியின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்கவுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை குஷ்பு மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,

கடவுளை நான் அவமதித்து விட்டதாக சொல்கிறார்கள். வல்லமை தாராயோ பட விழாவில் கடவுள்களை அவமதிக்கும் வகையிலோ யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ நான் நடந்து கொள்ளவில்லை என்று சுருக்கமாக கூறியுள்ளார்.

படத்தை இயக்கப் போகும் டைரக்டர் மதுமிதா கூறுகையில்,

பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பவர் குஷ்பு. அவர் இதுவரை எந்த கடவுளையும் அவமதித்ததில்லை. விழா மேடையில் நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கில் விழாவை நாங்கள் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: kushboo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X