Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கடவுளை அவமதித்தேனா-குஷ்பு மறுப்பு
இதில் எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் அம்மனின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தயின் சிலை அருக போடப்பட்ட நாற்காலி குஷ்புவுக்கு ஒதுக்கப்பட்டது. செருப்பு அணிந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து விழாவை ரசித்தார் குஷ்பு.
இந் நிலையில் கடவுள் சிலையை அவமதிக்கும் வகையிலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் குஷ்பு நடந்து கொண்டதாகக் கூறி கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்து முன்னணியின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்கவுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை குஷ்பு மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
கடவுளை நான் அவமதித்து விட்டதாக சொல்கிறார்கள். வல்லமை தாராயோ பட விழாவில் கடவுள்களை அவமதிக்கும் வகையிலோ யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ நான் நடந்து கொள்ளவில்லை என்று சுருக்கமாக கூறியுள்ளார்.
படத்தை இயக்கப் போகும் டைரக்டர் மதுமிதா கூறுகையில்,
பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பவர் குஷ்பு. அவர் இதுவரை எந்த கடவுளையும் அவமதித்ததில்லை. விழா மேடையில் நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கில் விழாவை நாங்கள் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.