சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!

அந்த வகையில் லேட்டஸ்ட் ராஜினாமா சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகை குஷ்புவுடையது.
திமுகவின் முக்கிய பேச்சாளரான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். திமுக-வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கியும் பேசினார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.
அதுவும் சொல்லி வைத்த மாதிரி, "சொந்தப் பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்புகள் இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என ராஜினாமா கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜிநாமா செய்தபோது, ராம நாராயணனும் இதே காரணத்தைத்தான் சொல்லியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











